News September 19, 2025
கள்ளக்குறிச்சி: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி நகராட்சியில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு நேற்று (செப். 18) மாலை, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுகாதாரம் ஆகிய வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சதீஷ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாநில இணைச் செயலாளர் செல்வராஜ் மற்றும் மாவட்டச் செயலாளர் சிவகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.
Similar News
News September 19, 2025
கள்ளக்குறிச்சி: உங்க ரேஷன் கார்டடை CHECK பண்ணுங்க…

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
1.AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய். 2.PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய். 3.NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம். 4.NPHH: சில பொருட்கள் மட்டும். உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய <
News September 19, 2025
கள்ளக்குறிச்சி: 12th போதும் ரூ.81,000 சம்பளம்

எல்லைப் பாதுகாப்புப் படையில் ரேடியோ ஆபரேட்டர் (RO) & ரேடியோ மெக்கானிக் (RM) பிரிவில் கான்ஸ்டபிள் பணிக்கு 1,121 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ITI, 12th படித்தவர்கள் படித்திருந்தால் போதும். இந்த பணிக்கு மாத சம்பளமாக ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை வழங்கப்படும். செப்.23 வரை இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <
News September 19, 2025
கள்ளக்குறிச்சி: தூய்மை இயக்கம் 2.0 – ஆட்சியர் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் இன்று (செப். 19) தூய்மை இயக்கம் 2.0 தொடங்கப்பட வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கார்த்திகா சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட உள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார். அனைத்து கல்வி நிறுவன உரிமையாளர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் இது குறித்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.