News April 12, 2024

ரூ.1.50 லட்சம் பறிமுதல்

image

தாரமங்கலம் அருகே நேற்று காரில் சென்ற பாஜக மாவட்ட பொதுச்செயலாளர் ரவி, முன்னாள் எம்.பி.யின் மகன் செந்தில்குமார் ஆகியோரிடம் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர். எம்.பியின் மகன் செந்தில்குமாரிடம் 1.50 லட்ச ரூபாய் பணம் முறையான ஆவணங்கள் இல்லாமல் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து ஓமலூர் தாலுக்கா அலுவலகத்தில் தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Similar News

News August 23, 2025

சேலம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள்!

image

சேலம் மாவட்டத்தில் (ஆக.23) இன்றைய முக்கிய நிகழ்வுகள்:
▶️காலை 9 மணி அஸ்தம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட பல பகுதிகளில் நலத்திட்ட பணிகள் துவக்கம் சுற்றுலாத் துறை அமைச்சர்.
▶️காலை 10 மணி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டு நாள் மாவட்ட மாநாடு துவக்கம் குஜராத்தி திருமண மண்டபம் ஐந்து ரோடு.
▶️ காலை 10:30 ராமகிருஷ்ணா ஆசிரமம் சார்பில் செய்தியாளர் சந்திப்பு கூட்டம் ராமகிருஷ்ண மடம்.

News August 23, 2025

சேலத்தில் ஆக.30க்குள் இதை செய்ய வேண்டும்!

image

சேலம் மாவட்டங்களில் உள்ள ஏற்கனவே பதிவு பெற்ற தொழிற்சாலைகள், புதிதாக பதிவு செய்யும் தொழிற்சாலைகள், புதிதாக மேம்படுத்தப்பட்ட <>https://dish.tn.gov<<>>. என்ற இணையதளம் மூலம் தொழிற்சாலை விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். தொழிற்சாலை உரிமம், வெளிமாநில தொழிலாளர்கள் பதிவுச் சான்று, ஒப்பந்த தொழிலாளர் வருகிற 30-ந் தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என கூடுதல் இயக்குனர் தெரிவித்தார். SHARE பண்ணுங்க!

News August 23, 2025

சேலம்: மகளிர் உரிமைத்தொகை கேட்டு 75,830 விண்ணப்பம்!

image

கடந்த ஜூலை 15-ஆம் தேதி முதல் ஆக.21- ஆம் தேதி வரை சேலம் மாவட்டத்தில் நடந்த ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் பல்வேறு துறைகளின் சார்பில் 65,658 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன. கலைஞர் உரிமைத்தொகைக் கேட்டு மட்டும் சுமார் 75,830 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!