News September 19, 2025

காஞ்சிபுரத்தில் இதற்கு அக்டோபர் 15ம் தேதி கடைசி!

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெடிபொருள் விதிகள் 2008-ன் கீழ் தற்காலிகமாக பட்டாசுகள் விற்பனை செய்ய விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது. இதன்படி, விற்பனையகம் அமைக்க விரும்பும் விற்பனையாளர்கள் மற்றும் வணிகர்கள் தற்காலிக உரிமம் பெற ஆவணங்களுடன் இ-சேவை மையங்கள் மூலமாக இணைய வழியில் அக்டோபர் 15-க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News September 19, 2025

காஞ்சி: 12th போதும், ரூ.81,100 சம்பளம்!

image

காஞ்சிபுரம் மக்களே! எல்லைப் பாதுகாப்புப் படையில் ரேடியோ ஆபரேட்டர் (RO) & ரேடியோ மெக்கானிக் (RM) பிரிவில் கான்ஸ்டபிள் பணிக்கு 1,121 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ITI, 12th படித்தவர்கள் படித்திருந்தால் போதும். இந்த பணிக்கு மாத சம்பளமாக ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை வழங்கப்படும். செப்.23 வரை விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்க்கை<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்கவும். ஷேர்!

News September 19, 2025

காஞ்சியில் ஓவியத்தால் தீட்டப்பட்ட அற்புதக் கோயில்!

image

காஞ்சிபுரம், திருப்பருத்திக்குன்றத்தில் உள்ள தீகம்பர சமண ஆலயம் பல்லவ மன்னன் சிம்மவிஷ்ணுவால் கிபி 556ல் கட்டப்பட்டது. இங்குள்ள மண்டபத்தில் விஜயநகர கால ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. இந்த ஓவியங்கள் சமண தீர்த்தங்கரர்களாகிய ரிஷபநாதர், வர்த்தமான மகாவீரர், நேமிநாதர் ஆகியோரது வாழ்க்கை வரலாற்றை சித்திரிக்கும் வகையிலுள்ளது. இந்த கோயிலில் உள்ள ஓவியங்களை காண்பதற்காகவே மக்கள் வந்து செல்கின்றனர் என்பது சிறப்பு!

News September 19, 2025

காஞ்சி: மாணவிக்கு பாலியல் தொல்லை!-அதிகாரி கைது!

image

காஞ்சிபுரத்தை சேர்ந்த 17 வயது மாணவி, சென்னையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இவர் சென்னைக்கு அரசு பேருந்தில் பயணம் செய்தபோது, பின்னால் அமர்ந்திருந்த ராகேஷ் என்பவர் இவருக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். பேருந்து ஓட்டுநர் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளிக்க போலீசார் ராகேஷை கைது செய்தனர். இவர் வேளாண் அதிகாரியாக உள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.

error: Content is protected !!