News April 12, 2024
திங்கட்கிழமை ₹1000 வரவு வைக்கப்படும்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகையான ₹1000 திங்கட்கிழமை (ஏப்ரல் 15) வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவுள்ளது. தமிழகத்தில் சுமார் 1 கோடிக்கும் அதிகமான பெண்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகின்றனர். தற்போது தேர்தல் நடைமுறைகள் அமலில் இருப்பதால் பணம் வருமா என்ற கேள்வி இருந்தது. ஆனால், பணம் கொடுக்க எந்த தடையும் இல்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கும் நிலையில் விரைவில் பணம் வரவு வைக்கப்படவுள்ளது.
Similar News
News November 8, 2025
தமிழகத்தில் பள்ளி பஸ்ஸுக்கு பாதுகாப்பு இல்லையா? EPS

திமுக ஆட்சியில் பட்டப்பகலில் சர்வ சாதாரணமாக குற்றச் செயல்கள் அரங்கேறுவது தொடர்கதையாகியுள்ளதாக EPS குற்றம்சாட்டியுள்ளார். மயிலாடுதுறையில் பள்ளி பஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதல், நாகையில் VAO சடலமாக மீட்பு உள்ளிட்டவைகளை சுட்டிக்காட்டி இந்த குற்றச்சாட்டை அவர் வைத்துள்ளார். பள்ளி பஸ் கூட சாலையில் பாதுகாப்பாக செல்ல முடியாத அவல நிலைக்கு CM என்ன பதில் வைத்திருக்கிறார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News November 8, 2025
தமிழகத்தின் பழமையான கோயில்கள் லிஸ்ட்

தமிழகத்தில் பெரும்பாலான கோயில்கள், வரலாற்று சிறப்புடையவை. ஆன்மிக சுற்றுலா செல்வோர், எந்த கோயில்களுக்கு செல்வது என்பதில் குழப்பம் இருக்கும். கவலையை விடுங்க. கண்களை மூடிக்கொண்டு, பிரசித்தி பெற்ற இந்த பழமையான கோயில்களுக்கு செல்லுங்கள். அவை என்னென்ன என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதை உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
News November 8, 2025
இஸ்ரேல் PM-க்கு கைது வாரண்ட் பிறப்பித்த துருக்கி

காஸாவில் படுகொலையில் ஈடுபட்டது, பேரழிவுக்கு காரணமானது உள்ளிட்ட குற்றச் செயல்களுக்காக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை கைது செய்ய துருக்கி வாரண்ட் பிறப்பித்துள்ளது. நெதன்யாகு, 2 அமைச்சர்கள் உள்பட 37 இஸ்ரேலியர்களின் பெயர்கள் இந்த வாரண்ட்டில் உள்ளது. இஸ்ரேல் இதை நிராகரித்துள்ள நிலையில், அரசியல் நெருக்கடியால் மக்களை ஏமாற்றவே துருக்கி அதிபர் எர்டோகன் இந்த ஸ்டண்ட்டை செய்வதாக விமர்சனம் எழுந்துள்ளது.


