News September 19, 2025
நெல்லை மாநகராட்சி பகுதிக்குள் செல்ல தடை!

திருநெல்வேலி பழைய பேட்டையில் உள்ள வாகன முனையம் மற்றும் விற்பனைச் சந்தை வரும் 22ம் தேதி முதல் இயங்கும் என மாநகராட்சி நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது. 22 ஆம் தேதி முதல் கனரக வாகனங்கள் மற்றும் அனைத்து வகையான லாரிகள் மாநகராட்சி பகுதிக்குள் வந்து செல்வதற்கு தடை விதிக்கப்படுவதாகவும் மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் மாநகராட்சி அறிவித்துள்ளது.
Similar News
News September 19, 2025
கவின் கொலை வழக்கு: போலி பதிவெண் பயன்படுத்திய சுர்ஜித்!

நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்திய கவின் கொலை வழக்கை சிபிசிஐடி போலீசார் ஆக. 18 முதல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைதான சுர்ஜித் மற்றும் அவரது தந்தை SI சரவணனிடம் மேற்கொண்ட விசாரணையில் கொலை செய்த சுர்ஜித் பயன்படுத்திய டூவீலர் பதிவெண் போலி என தெரிய வந்துள்ளது. மேலும் கொலைக்காக ஜெயபால் என்பவர் இடத்தையும் சுர்ஜித் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.
News September 19, 2025
நெல்லை: ராணுவ வீரர் பலி

திருவேங்கடம் அழகாபுரி கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் மகேந்திரன் நேற்று (செப் 18) தனது மகனின் மருத்துவ பரிசோதனை சான்று வாங்குவதற்காக பைக்கில் அழகாபுரியிலிருந்து நெல்லைக்கு வந்துவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். மானூர் அருகே அழகிய பாண்டியபுரம் சிற்றாற்று பாலம் அருகே பைக்கு சென்ற போது சாலையோர பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் மகேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
News September 19, 2025
நெல்லை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

நெல்லை மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!