News September 19, 2025

மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை மின்தடை பகுதிகள்!

image

நமது மயிலாடுதுறையில் நாளை 20.09.2025 ஆம் தேதி காலை 9.00 மணி முதல் மாலை 500 மணி வரை துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் தடை ஏற்படும் பகுதிகள்!

1.பொறையார்
2.தரங்கம்பாடி
3.கிடாரங்கொண்டான்
4.செம்மனார்கோயில்,
5.பாலையூர்
6.வடமட்டம்
7.கோமல்
ஆகிய சுற்றுவட்டாரா பகுதிகளில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை SHARE பண்ணுங்க!

Similar News

News September 19, 2025

மயிலாடுதுறை: கடைசி தேதியை அறிவித்த கலெக்டர்

image

தீபாவளி பண்டிகை வருகிற 20.10. 2025 அன்று கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோர் நிபந்தனைகளின்படி வருகிற 10.10.2025குள் உரிய ஆவணங்களுடன் அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலம் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். பொது மக்களுக்கு சிரமம் இல்லாத ஆட்சேபனையற்ற மற்றும் பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்து விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

News September 19, 2025

மயிலாடுதுறையில் பெய்த மழையின் அளவு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மணல்மேடு, சீர்காழி, தரங்கம்பாடி, கொள்ளிடம், உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் நேற்று மாலை கருமேகங்கள் சூழ்ந்து இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மாவட்டத்திலேயே அதிகபட்சமாக மயிலாடுதுறையில் 75 மி.மீ மழை பதிவாகியுள்ளது. தரங்கம்பாடியில் 67.60 மிமீ, செம்பனார்கோவிலில் 61.மிமீ சீர்காழியில் 42.மிமீ மழை பொழிந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 19, 2025

மயிலாடுதுறை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

மயிலாடுதுறை மக்களே.., வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!