News September 19, 2025
புதுக்கோட்டை: மின்னல் தாக்கி பெண் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வீரமங்கலத்தைச் சேர்ந்த அஞ்சலை (55) என்பவர் நேற்று இரவு மின்னல் தாக்கி படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் கொண்டு சென்ற நிலையில், அங்கு பரிசோதித்த மருத்துவர் அவர் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். அவரது உடல் உடல்கூறு ஆய்விற்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 19, 2025
புதுக்கோட்டை: 10th போதும்; ஏர்போர்ட்டில் வேலை!

இந்திரா காந்தி சர்வதேச விமானப் சேவைகள் (IGI Aviation Services) நிறுவனத்தில் காலியாக உள்ள ‘1446’ Airport Ground Staff மற்றும் Loaders பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10 & 12-ம் வகுப்பு முடித்த, 18-30 வயதுக்குட்பட்ட நபர்கள் இங்கே <
News September 19, 2025
புதுகை: அரசு பள்ளிக்கு டெஸ்க், பெஞ்ச் வழங்கிய எம்.எல்.ஏ

புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் அகரப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் இன்று (செப்19) எம்.எல்.ஏ நிதியில் டெஸ்க் பெஞ்ச் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் எம்எல்ஏ முத்துராஜா கலந்துகொண்டு பள்ளி நிர்வாகத்திடம் டெஸ்ட் பெஞ்ச் ஆகியவற்றை ஒப்படைத்தார். இந்நிகழ்வில் மேயர் திலகவதி துணை மேயர் லியாகத்அலி மற்றும் அந்த பகுதி திமுக நிர்வாகிகள் ஒன்றிய பொறுப்பாளர்கள் கிராம மக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
News September 19, 2025
புதுக்கோட்டை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

புதுக்கோட்டை மக்களே.., வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!