News April 12, 2024
தமிழகம் வந்தார் ராகுல் காந்தி

மக்களவைத் தேர்தல் பிரசாரத்திற்காக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தமிழகம் வந்தடைந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்திறங்கிய ராகுலுக்கு காங்கிரசார் உற்சாக வரவேற்பு அளித்தனர். நெல்லை மற்றும் கோவையில் நடைபெறும் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் ராகுல், I.N.D.I.A கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
Similar News
News July 6, 2025
புதிய ரேஷன் கார்டுகள்… மக்களுக்கு ஹேப்பி நியூஸ்

புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து நீண்ட காலம் காத்திருப்பவர்கள் ஏராளம். ஆனால், புது ரேஷன் கார்டு பெற ஈசியான வழி கிடைத்துள்ளது. ஜூலை 15-ல் தொடங்கும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் அளிக்கும் மனுக்களுக்கு 45 நாள்களில் தீர்வு காண CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த முகாம்களில் ரேஷன் கார்டு பெற விண்ணப்பம் அளித்தால் உடனே அரசு ஒப்புதல் வழங்கும் எனக் கூறப்படுகிறது. உடனே முந்துங்கள். SHARE IT.
News July 6, 2025
தமிழறிஞர் வா.மு.சேதுராமன் மறைவு: தலைவர்கள் அஞ்சலி

<<16955086>>தமிழறிஞர் வா.மு.சேதுராமன்<<>> உடலுக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதுவரை, CM ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன், வைகோ, வேல்முருகன், மல்லை சத்யா உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர். நாளை அவரது உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது. சேதுராமனை கௌரவிக்கும் விதமாக அரசு மரியாதை செலுத்தப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு சேதுராமன் குடும்பத்தினர் இன்று நன்றி தெரிவித்துள்ளனர்.
News July 6, 2025
இந்த தப்பை செய்தால் PF பென்சன் கிடைக்காது

உங்களுடைய PF கணக்கில் இந்த விதியை மீறினால் பென்சன் பணம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். EPFO வகுத்துள்ள விதிகளின்படி, எந்தவொரு ஊழியரும் தனது PF கணக்கில் 10 ஆண்டுகளுக்கு பணத்தை டெபாசிட் செய்தால், அவர் ஓய்வூதியம் பெற தகுதியுடையவர் ஆகிறார். அந்த ஊழியர் 50 வயதுக்குப் பிறகு ஓய்வூதியம் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் கணக்கின் முழுத் தொகையையும் எடுத்தால் உங்களுக்கு ஓய்வூதியம் கிடைக்காது.