News September 18, 2025
செங்கல்பட்டு: பெரியாருக்கு முன்பே சமூக மாற்றம்

சாதிய முறைகளுக்கு எதிராக அம்பேத்கர், பெரியாருக்கு முன்பே சமூக மாற்றத்திற்கு வித்திட்டவர் இரட்டைமலை சீனிவாசன். 1860 ஜூலை 7ல் செங்கல்பட்டு மாவட்டம் கோழியாளத்தில் பிறந்து தமிழ்நாட்டில் மேற்கத்திய கல்வி முறையில் பட்டம் பெற்ற முதல் தாழ்த்தபட்ட சமூக பிரதிநிதியாக, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடி ஆதிதிராவிட நலப்பள்ளிகள், விடுதிகள், உதவித்தொகை கிடைக்க செய்தார். இவரின் நினைவு தினம் இன்று.
Similar News
News September 18, 2025
செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி காவலர் விவரம்

செங்கல்ப்ட்டு மாவட்டத்தில் இன்று (செப்-18) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 18, 2025
தாம்பரம் காவல்துறை விழிப்புணர்வு

செங்கல்பட்டு மாவட்டம், சேலையூர் அனைத்து மகளிர் காவல்துறையினாரால்
வைஷ்ணவ கல்லூரியில் உள்ள மாணவியருக்கு காவல் உதவி செயலியின் நன்மைகள் மற்றும் பயன்பாடு, POCSO சட்டம் விழிப்புணர்வு மற்றும் போதைப்பொருள் பாவனை தடுப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியை இன்று
(செப் -18) நடத்தியது. ஏராளமான மாணவியர்கள் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
News September 18, 2025
செங்கல்பட்டு: ட்ரெண்டாகும் AI புகைப்படம் எச்சரிக்கை!

செங்கல்பட்டு மக்களே Google Gemini பெயரில் வைரலாகும் Nano Banana Al ட்ரெண்ட் தொடர்பாக, தனிப்பட்ட தகவல்கள் மற்றும் புகைப்படங்களை போலியான இணையதளங்கள் அல்லது செயலிகளில் பதிவேற்ற வேண்டாம். ஒரே கிளிக்கில் உங்கள் வங்கிகணக்கு போன்ற தனிநபர் விபரங்கள் திருடப்படலாம் என சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இதனை அனைவருக்கும் SHARE செய்யுங்கள்.