News September 18, 2025
காசாவை நினைத்து நெஞ்சம் பதறுகிறது: ஸ்டாலின்

காசாவில் நடைபெறும் சம்பவங்களால் சொல்லமுடியாத அளவுக்கு வேதனையடைந்ததாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். குழந்தைகளின் அழுகை, பட்டினிக் காட்சிகள் நெஞ்சை உலுக்குகிறது; அப்பாவி உயிர்கள் நசுக்கப்படும்போது அமைதி காக்க முடியாது எனக் கூறிய அவர், காசாவில் போரை நிறுத்துவது குறித்து இந்தியா உறுதிப்பட பேசவும், உலகம் ஒன்றுபட்டு, இப்போதே இந்த பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவரவும் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News April 11, 2026
விஜய்க்கு பதிலடி… ராகுலை நகர்த்தும் ஸ்டாலின்

உண்மையான காங்கிரஸ் தவெக பக்கம் இருப்பதாக விஜய் கூறியதற்கு செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்தார். எனினும் இதில் தேசிய தலைமை பதில் தராவிட்டால் காங்கிரஸின் ஓட்டு விஜய்க்கு செல்ல வாய்ப்புள்ளதாக திமுக தலைமை கருதுகிறது. அதன்படி தமிழகம் வரும் ராகுல் காந்தி, விஜய்யின் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்ல வேண்டியதுடன், அவரை விமர்சிக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளதாக அக்கட்சியினர் கூறுகின்றனர்.
News April 11, 2026
இனி ₹10,000-க்கு மேல் அனுப்பினால் லேட் ஆகும்!

பொதுமக்கள் டிஜிட்டல் பண பரிவர்த்தனை மோசடியில் சிக்குவதை தடுக்கும் நோக்கில் RBI முக்கிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் இனி ₹10,000-க்கும் அதிகமான தொகையை டிஜிட்டல் முறையில் ஒரு வங்கி கணக்கில் இருந்து மற்றொரு கணக்கிற்கு அனுப்பும்போது, ஒரு மணிநேரம் கழித்தே சென்றடையும் என்ற புதிய விதியை முன்மொழிந்துள்ளது. இதுகுறித்து மே 8-ம் தேதி வரை கருத்து தெரிவிக்கலாம் என்றும் கூறியுள்ளது.
News April 11, 2026
தமிழிசைக்கு கவர்னர் பதவி தான் சரியா இருக்கும்: உதயநிதி

EPS-ஐ பத்து தோல்வி பழனிசாமி என அழைப்பதை போல, இங்கு 6 தோல்வி தமிழிசை இருக்கிறார் என உதயநிதி விமர்சித்துள்ளார். மயிலாப்பூரில் பிரசாரம் செய்த அவர், தெற்கு, வடக்கு என எல்லா இடங்களிலும் போட்டியிட்டு மக்கள் தன்னை வெற்றி பெற வைப்பார்களா என்று பார்க்கிறார். ஆனால் மக்கள் அவரை தொடர்ந்து நிராகரித்து வருகின்றனர் என்றார். அவருக்கு கவர்னர் பதவிதான் சரியாக இருக்கும். எனவே அவரை தோற்கடிக்க வேண்டும் என கூறினார்.


