News September 18, 2025
திண்டுக்கல்லில் மினி பஸ் இயக்க அழைப்பு!

திண்டுக்கல் வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட ஏர்போர்ட் நகர் – விராலிப்பட்டி -ஆலம்பட்டி, அய்யலூர், வேடசந்தூர், வெல்லம்பட்டி சாலையூர், நால்ரோடு – சுள்ளறும்பு, பெருமாள்மலை – அடுக்கம், நிலக்கோட்டை போலீஸ் ஸ்டேஷன்- தாலுகா அலுவலகம், பெருமாள்மலை – கணேஷ்புரம் ஆகிய இடங்களில் மினி பேருந்துகளை இயக்க ஆர்வம் உள்ளவர்கள் நாளை(செப்.19) வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
Similar News
News March 5, 2026
பழனி: இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

பழனியை அடுத்த ஆயக்குடியை சேர்ந்த கருப்புசாமி (33). இவர், குடும்ப பிரச்சினை காரணமாக மன வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் யாரும் இல்லாதபோது கருப்புசாமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்திற்கு வந்த ஆயக்குடி போலீசார் கருப்புசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி GH-க்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரிகின்றனர்.
News March 5, 2026
சிசிடிவி கேமிரா பொருத்த காவல்துறை விழிப்புணர்வு

திண்டுக்கல் மாவட்டத்தில் குற்றத் தடுப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை இணையதளம் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது. “காவல்துறையின் மூன்றாம் கண் – சிசிடிவி கேமிரா பொருத்துவோம், பாதுகாப்பாக இருப்போம்” என்ற வாசகத்துடன் வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் நிறுவனங்களில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News March 4, 2026
திண்டுக்கல்லில் இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்!

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (மார்.04) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


