News September 18, 2025
மதுரையில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்

மதுரை மாவட்ட விவசாயிகளுக்கு குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் பிரவீன் குமார் தலைமையில் நாளை செப்.19 காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் விவசாயத்தை சார்ந்த அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொள்கிறார்கள். விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக வழங்கலாம் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 8, 2026
மதுரை: 800 போட்டிகளில் பிடிபடாத காளை மரணம்

பாலமேடு, பொம்மிநாயக்கன்பட்டி முத்தாலம்மன் கோயில் ஜல்லிக்கட்டு காளை ‘சண்டியர்’ வயது முதிர்வால் இறந்தது. 24 ஆண்டுகளாக பல இடங்களில் நடந்த 800-க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகளில் பங்கேற்று பிடிபடாத காளையாக பல பரிசுகள் வென்று கிராமத்திற்கு பெருமை சேர்த்தது. காளைக்கு கிராம மக்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் அஞ்சலி செலுத்தி மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்.
News March 8, 2026
மதுரையில் அரிவாள் வெட்டு; சிறுவன் கைது

மதுரையை சேர்ந்த முனியாண்டி (52) வீட்டின் அருகே 17 வயது சிறுவன் குடிபோதையில் ரகளை செய்தார். இதை அவர் தட்டி கேட்க, ஆத்திரமடைந்த சிறுவன் அரிவாளை எடுத்து வந்து முனியாண்டியை சரமாரியாக வெட்டினார். முனியாண்டியை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஜெய்ஹிந்த்புரம் போலீசார் சிறுவனை கைது செய்து சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.
News March 8, 2026
மதுரை மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

மதுரை மாநகரில் இன்று (07.03.2026) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.


