News September 18, 2025

போலி வாக்காளர்கள்: மீண்டும் குண்டை தூக்கிப்போட்ட ராகுல்

image

மகாராஷ்டிராவின் ராஜுராவில் போலியாக 6,850 வாக்காளர்கள் இணைக்கப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். அதில், பாதி பேரின் முகவரியில் ‘Sasti, Sasti’ என இருப்பதாக தெரிவித்த அவர், கர்நாடகாவின் ஆலந்த் தொகுதியிலும் 6,018 வாக்காளர்களை நீக்கும்படி போலி விண்ணப்பங்கள் வந்ததாகவும் கூறியுள்ளார். ஆலந்த் தொகுதி தற்போது காங்., இடமும், ராஜுரா தொகுதி பாஜகவிடமும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News September 18, 2025

BREAKING: நாடு முழுவதும் விலையை குறைத்து அறிவிப்பு

image

சமீபத்தில் மேற்கொண்ட GST சீர்திருத்தங்களை அடுத்து, மாருதி சுசுகி நிறுவனம், தனது கார்களின் விலையை குறைத்து அதிகாரப்பூர்வ பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி, ₹46,000 – ₹1.12 லட்சம் வரை குறைத்துள்ளது. Alto Kl0 மாடல் ₹1,07,600 வரையிலும், Ignis – ₹71,300, DZire (₹87,700) Swift (₹84,600), Baleno (₹86,100) போன்றவை குறைந்துள்ளதால், கார் வாங்க நினைப்பவர்களுக்கு இனிப்பான செய்தியாக அமைந்துள்ளது.

News September 18, 2025

கல்கி 2-ம் பாகத்தில் தீபிகா படுகோன் இல்லை

image

பேன் இந்தியா படமான ‘கல்கி 2898 ஏடி’ 2-ம் பாகத்தில் தீபிகா படுகோன் நடிக்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்கி போன்ற படங்களில் நடிக்க முழு ஒத்துழைப்பு தேவை எனவும் நன்கு பரிசீலித்த பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், x தளத்தில் தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது. ஏற்கெனவே பிரபாஸின் ‘ஸ்பிரிட்’ படத்தில் இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்காவுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக அவர் விலகியிருந்தார்.

News September 18, 2025

நேபாள சூழலை இந்தியாவில் உருவாக்க ராகுல் முயற்சி: பாஜக

image

ராகுல் காந்தி சுமத்தும் <<17748314>>வாக்கு திருட்டு <<>>குற்றச்சாட்டு ஆதாரமற்றது என அனுராக் தாக்குர் கூறியுள்ளார். ஜனநாயக அமைப்புகளுக்கு எதிராக கேள்வி எழுப்புவதன் மூலம் வங்கதேசம், நேபாளத்தில் ஏற்பட்ட நிலைமையை இந்தியாவிலும் ராகுல் உருவாக்க முயற்சிப்பதாக அவர் சாடியுள்ளார். மேலும், தேர்தல் தோல்வி எதிரொலியாக விரக்தியில் பேசும் ராகுல், இந்த விஷயத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!