News September 18, 2025
நீலகிரி: 12பேரைக் கொன்ற யானையை பிடிக்க தீவிரம்

முதன்மை தலைமை வன உயிரினப் பாதுகாவலர் ராகேஷ்குமார் டோக்ரா, கடந்த 15ஆம் தேதி, 12 பேரை கொன்ற ராதாகிருஷ்ணன் என்ற யானையைப் பிடிக்க உத்தரவு பிறப்பித்தார். அதனைத் தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் தலைமையில் வனச் சரகர்கள், வனப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் இணைந்து விரிவான தேடுதல் பணி தொடங்கப்பட்டது. யானையின் உடல்நலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அதனை கண்காணித்து மயக்க ஊசி போட்டு பிடிக்க தயார் நிலையில் உள்ளனர்.
Similar News
News September 18, 2025
நீலகிரி: வீட்டை சேதப்படுத்திய காட்டு யானை!

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே படைச்சேரி பகுதியில் ஒற்றை காட்டு யானை முகாமிட்டு இருந்தது. இந்த யானை, தேவதாஸ் என்பவருக்கு சொந்தமான வீட்டின் அருகே, காபி மரங்களை சேதப்படுத்தியது. அப்போது, பாக்கு மரம் வீட்டு கூரை மீது விழுந்ததில் சேதம் ஏற்பட்டது. வீட்டினுள் அறையில் யாரும் இல்லாததால் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படவில்லை. தகவல் அறிந்த சேரம்பாடி வனச்சகர் அய்யனார் நேரில் ஆய்வு செய்தார்.
News September 18, 2025
நீலகிரியில் காட்டு யானை அட்டகாசம்!

நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட நியூ ஹோப் கிளை நூலகத்தை இன்று அதிகாலை காட்டு யானை ஒன்று நூலகத்தின் கதவை சேதப்படுத்தி உள்ளது. உணவு தேடி வந்த யானை கதவை சேதப்படுத்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. நூலகத்தின் கதவை உடைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. மீண்டும் யானை உணவு தேடி வரலாம் என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர். வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.
News September 18, 2025
நீலகிரி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

நீலகிரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நல சங்கம் மூலம் செயல்படுத்தப்படும் 5 திட்டங்களுக்கு இ-சேவை வழியாக விண்ணப்பிக்கலாம். அதன்படி கல்வி உதவித் தொகை, உதவி உபகரணங்கள், திருமண உதவித்தொகை, மாதாந்திர உதவித்தொகை போன்றவற்றை http://www.tnesevai.tn.gov.in என்ற இணைய தளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதை உடனடியாக மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.