News September 18, 2025

சிவகங்கை:மாதம் ரூ.750 உதவி தொகையுடன் படிக்கலாம்

image

சிவகங்கை முத்துப்பட்டியில் உள்ள அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் நடைபெறும் நிகழாண்டு நேரடி மாணவர் சேர்க்கை வரும் செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும்போது மதிப்பெண் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், ஆதார் அட்டை நகல், புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு வர வேண்டும். பயிற்சியின் போது மாதம் ரூ.750 உதவி தொகை வழஙகப்படும்.

Similar News

News September 18, 2025

சிவகங்கையில் சிறப்பு முகாம் தேதியை அறிவித்த கலெக்டர்

image

தமிழக முதல்வரின் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாமானது, வருகின்ற 20.9.2025 அன்று காளையார்கோவில் ஹோலி ஸ்பிரிட் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. இதனை பொதுமக்கள் கருத்தில் கொண்டு, தங்களது பகுதிகளில் நடைபெறவுள்ள முகாமினை பயன்படுத்திக் கொண்டு, தங்களது உடல்நலத்தினை முறையாக பேணிக்காத்து பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்

News September 18, 2025

சிவகங்கை: 10th தகுதி.. ரூ.71,000 சம்பளத்தில் வேலை

image

தமிழக அச்சுத்துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், பிளம்பிங் பிரிவில் 56 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. இப்பணிகளுக்கு 10th, ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. மாத சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும்.<> இங்கு கிளிக் செய்து<<>> விண்ணப்பத்தை பதிவிறக்கி பூர்த்தி செய்து நாளைக்குள் செப். 19 சென்னையில் உள்ள அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். தேர்வு இல்லா அரசு வேலை உடனே SHARE பண்ணுங்க

News September 18, 2025

சிவகங்கை: போதை மருந்துகள் பயன்படுத்த உரிமம்

image

சிவகங்கையில் உரிமம் பெறாமல் போதை மருந்தை பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். எனவே சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகள் உரிய ஆவணங்களுடன் வருகிற 30.9.2025 -ஆம் தேதிக்குள் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் உதவி ஆணையா் (கலால்) அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும், என மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி அறிவித்துள்ளார்.

error: Content is protected !!