News September 18, 2025
ஈரோடு: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

ஈரோடு மக்களே.., வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News September 18, 2025
ஈரோட்டில் தெரிய வேண்டிய முக்கியமான செயலி!

ஈரோடு மாவட்ட காவல்துறை பொதுமக்கள் பாதுகாப்பை முன்னிட்டு, இணையவழி மோசடிகளைத் தவிர்க்கும் வகையில் புதிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், யாரும் ஏமாற்றங்களுக்கு ஆளாகாமல் இருக்க, பொதுமக்கள் அதிக விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியம் என வலியுறுத்தியுள்ளது. “காவல் உதவி” என்ற செயலியை பதிவிறக்கம் செய்து அவசர உதவிகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News September 18, 2025
ஈரோடு: நாய்கள் கடித்து 7 ஆடுகள் பலி!

ஈரோடு: சென்னிமலை, முகாசிப்பிடாரியூர் ஊராட்சி, சென்னியங்கிரி வலசையைச் சேர்ந்தவர் விவசாயி கவிதா. இவர் தோட்டத்தில் 57 செம்பறி ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று(செப்.17) இரவு இந்த ஆடுகளை பட்டியில் அடைத்துள்ளார். தெரு நாய்கள் 3 மேற்பட்ட நாய்கள் பட்டியல் புகுந்து 29 ஆடுகளை கடித்துள்ளன. இதில் 7ஆடுகள் இறந்துவிட்டன. 22 ஆடுகள் காயம் அடைந்துள்ளன.
News September 18, 2025
ஈரோடு: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை!

ஈரோடு மக்களே…, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள 127 ‘Specialist Officer’ பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு B.E/B.Tech, CA/CMA,M.SC,MBA,MCA படித்தவர்கள் அக்டோபர் 3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாதம் ரூ.64,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <