News September 18, 2025
செங்கல்பட்டில் இன்று மழை வெளுக்கும்

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், கடலோர பகுதிகளில் மணிக்கு, 40 முதல் 50 கி.மீ., வேகத்திலும், இடையிடையே, 60 கி.மீ., வேகத்திலும், சூறாவளிக்காற்று வீசக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 21 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளத்தக்க வானிலை மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஷேர் பண்ணுங்க.
Similar News
News March 12, 2026
செங்கை: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News March 12, 2026
செங்கல்பட்டு: 10ஆம் வகுப்பு தேர்வில் 294 பேர் ஆப்சென்ட்

செங்கல்பட்டு மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது.
முதல் நாளாக தமிழ் பாடத் தேர்வு நடைபெற்றது. மொத்தம் 31,291 மாணவ-மாணவியர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். இதில் 294 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. தேர்வு மையங்களில் தேவையான வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
News March 12, 2026
செங்கல்பட்டு: G-PAYவில் சிலிண்டர் புக் செய்யலாம்!

தமிழகத்தில் சிலிண்டர் புக் செய்வதில் சிரம நிலை தொடர்கிறது. இந்நிலையில், உங்களின் G-PAY மூலமாகவே உங்களுக்கான சிலிண்டரை புக் செய்யலாம். G-PAY செயலில் உள்ள கேஸ் புக்கிங் என்ற ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க. அதில், உங்களது மொபைல் நம்பர், அல்லது கேஸ் ஐடியை அளித்து லிங்க் செய்தால் போதும், உடனடையாக பணத்தை செலுத்தி புக் செய்யலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.


