News September 18, 2025
மதுரை அருகே மின்னல் தாக்கி மாணவர் பலி

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா காளப்பன்பட்டி ராஜ்குமார் மகன் கவுதம் 18. இவர் கருமாத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். மாலை கல்லூரி விட்டு வீடு திரும்புவதற்காக காளப்பன்பட்டி அருகே டூவீலரில் இவரது நண்பர் அருண்பாண்டியுடன் வந்து கொண்டிருந்தார். அப்போது மின்னல் தாக்கி கவுதம் இறந்தார். அருண் பாண்டி காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
Similar News
News September 18, 2025
மதுரை காமராஜர் பல்கலை முக்கிய அறிவிப்பு

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி மூலம் இளநிலை, முதுநிலை மற்றும் பட்டய சான்றிதழ் படிப்புகளில் படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கான தொடர்பு வகுப்புகள் நடக்க உள்ளன. இந்த வகுப்புகளில் சேர விரும்புபவர்கள் பல்கலைக்கழகத்தின்
https://mkuniversityadmission.samarth.edu.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலமும் நேரடியாக வரும் செப்-30 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
News September 18, 2025
மதுரையில் தூய்மை பணி முடக்கம்

மதுரையில் தூய்மை பணி முடக்கம் காரணமாக நகரெங்கும் குப்பைகள் தேங்கியுள்ளன. OURLAND என்ற தனியார் நிறுவனத்துக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே சம்பள பிரச்சனை மோதல் நீடிப்பதால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மாநகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், குப்பைகள் தொடர்ந்து தேங்குகின்றன. இதனால் மதுரை நகர் முழுவதும் அங்காங்கே குப்பைகளாக காட்சியாளிகிறது.
News September 18, 2025
மதுரை டூ டெல்லி தினசரி சேவை

மதுரையில் இருந்து டெல்லிக்கு வாரத்தில் 4 நாட்கள் மட்டும் விமானம் இயக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று (செப். 17) முதல் தினசரி சேவை வழங்கப்படுகிறது. அதன்படி, தினமும் அதிகாலை 5:15 மணிக்கு டெல்லியில் புறப்படும் விமானம் காலை 8:25 மணிக்கு மதுரை வந்தடையும். மறுமார்க்கமாக, மதுரையில் இருந்து காலை 8:55 மணிக்கு புறப்படும் விமானம் மதியம் 12:10 மணிக்கு டெல்லி சென்றடையும்.