News September 18, 2025
மதுரை அருகே மின்னல் தாக்கி மாணவர் பலி

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா காளப்பன்பட்டி ராஜ்குமார் மகன் கவுதம் 18. இவர் கருமாத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். மாலை கல்லூரி விட்டு வீடு திரும்புவதற்காக காளப்பன்பட்டி அருகே டூவீலரில் இவரது நண்பர் அருண்பாண்டியுடன் வந்து கொண்டிருந்தார். அப்போது மின்னல் தாக்கி கவுதம் இறந்தார். அருண் பாண்டி காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
Similar News
News March 7, 2026
BREAKING: மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் அறிவிப்பு!

மதுரையில் உள்ல உலகபுகழ் பெற்ற மீனாட்சி சுந்தேரஸ்வரர் கோயிலில் வருகிற செப்.17ம் தேதி காலை 7.45 மணிக்கு மேல் 8.10 மணிக்குள் திருக்குட முழுக்கு நன்னீராட்டு பெருவிழா நடத்தப்படுமென அமைச்சர் சேகர்பாபு தலைமையிலான சீராய்வு கூட்டத்தில் முடிவு செய்யபட்டுள்ளது. என்ன மதுரை மக்களே…! பண்டிகையை கொண்டாடுவோமா?? COMMENT..!
News March 7, 2026
மதுரைக்கு வரும் திட்டங்களை தடுக்கிற பாஜக ஆட்சி : ஸ்டாலின்

எய்ம்ஸ் கட்ட தாமதம் மட்டுமல்ல, மதுரையில் மெட்ரோ வராமல் தடுக்கிற ஆட்சியாக பாஜக அரசு உள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு மதுரை வந்த பிரதமர் மோடியால் எந்த திட்டத்தையாவது சொல்ல முடிந்ததா? இது கொள்கை கூட்டணி மட்டுமல்ல, மக்கள் மீண்டும் மீண்டும் தேர்தெடுக்கக் கூடிய வெற்றிக் கூட்டணி என ஓபிஎஸ் -ன் 1 லட்சம் ஆதரவாளர்கள் இணையும் நிகழ்வில் முகஸ்டாலின் பேச்சு..
News March 7, 2026
மோடி அதிமுக பெயரையே சொல்ல மாட்டார் – மு.க.ஸ்டாலின்

பிரதமர் மோடி அதிமுக பெயரையே சொல்ல மாட்டார். இரண்டு விரல் காட்டும் படத்தை கூட மாற்றிவிடுவார்கள். சிவ சேனா, நிதிஷ்குமாருக்கு நடக்கின்ற மாதிரிதான் பழனிச்சாமிக்கும் நடக்க போகின்றது. இதையொல்லாம் முன்கூட்டிய கனித்ததால் தான் அதிமுக வின் உன்மை தொண்டர்கள் எல்லாம் திமுக விற்கு வந்துள்ளனர். மதுரைக்கு மட்டும் இந்த ஆட்சியில் ரூ.6000 கோடிக்கு மேல் திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம் என மதுரையில் முதல்வர் பேசினார்.


