News September 18, 2025

BREAKING: வேலூர் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

image

ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக அதிக அளவு மழை பெய்து வருகிறது. இதனால் கலவகுண்டா நீர்த்தேக்கத்திலிருந்து உபரி நீர் வெளியேற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொன்னை ஆற்றின் கரையோர பகுதியில் உள்ள மாதாண்டகுப்பம், எருக்கம்பட்டு, வள்ளிமலை, மேல்பாடி, கீழ்பாதநல்லூர், தேன்பள்ளி பகுதியில் உள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்து மக்களுக்கு தெரியப்படுத்துங்க

Similar News

News September 18, 2025

வேலூர் ஆட்சியர் பயிற்சி வகுப்புகள் குறித்து அறிவிப்பு

image

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கப்படுகிறது. தற்போது தாட்கோ, தனியார் நிறுவனத்துடன் இணைந்து அழகுக்கலை, சிகை அலங்கார பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதை பெற (www.tahdco.com) என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

News September 18, 2025

வேலூர்: B.Sc, BE, B.Tech, BCA படித்தவரா நீங்கள்?

image

வேலூர் மக்களே! ஐடி துறையில் சாதிக்க விரும்புபவரா நீங்கள்? உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு இதோ. தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் கணினி அறிவியல், ஐடி துறையில் ஏதேனும் ஒரு டிகிரி படித்தவர்களுக்கு டெவலப்பர் பணிக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. மேலும், இதில் பயிற்சி முடித்தவர்களுக்கு முன்னணி தனியார் நிறுவனங்களில் உறுதியாக வேலை ஏற்படுத்தி தரப்படும். <>இந்த லிங்க்<<>> மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர்

News September 18, 2025

வேலூர்: தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பவரா நீங்கள்?

image

வேலூர் மாவட்டத்தில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, அனைத்து பகுதிகளிளிலும் பட்டாசுகள் விற்பனை செய்ய விரும்பும் விற்பனையாளர்கள் & வணிகர்கள் நிபந்தனைகளின்படி உரிய ஆவணங்களுடன் “இ” சேவை மையங்கள் மூலமாக ஆன்லைனில் வரும் அக்டோபர் 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!