News September 18, 2025
காஞ்சிபுரம்: தலை நசுங்கி ஒருவர் பலி!

காஞ்சிபுரம் டெம்பிள் சிட்டி கணேஷ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரவி (52) ஆச்சாரியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று (செப்.,18) தனது மகளுடன் கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஓரிக்கை, மிலிட்டரி ரோடு சத்யா நகர் பகுதியில், பணியாளர்களை அழைத்துச் செல்ல வந்த தனியார் நிறுவன பேருந்து மோதியதில், ரவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தாலுக்கா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News March 5, 2026
காஞ்சிபுரம் கலெக்டர் நடவடிக்கை!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேசிய நுகர்வோர் கூட்டுறவு கூட்டமைப்பு நடத்தும் நெல் கொள்முதல் மையத்தில் நெல் விற்ற விவசாயிகளுக்கு பணம் வழங்க தாமதமானதாக புகார் எழுந்தது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் விசாரணை நடத்தி, நிலுவைத் தொகை வழங்கும்வரை அந்த அமைப்புக்கு நெல் கொள்முதல் செய்ய தடை விதித்து நடவடிக்கை எடுத்தார். இதனால் விவசாயிகளுக்கு விரைவில் பணம் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
News March 5, 2026
காஞ்சிபுரம் BDO எண்களை தெரிஞ்சிக்கோங்க!

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., உங்கள் பகுதியில் சாலை வசதி, பாலம், மின் விளக்கு, பஸ் ஸ்டாண்ட் நிழற்குடை, குடிநீர் வசதிகள் குறித்த புகார், கோரிக்கைகளை உங்கள் பகுதி BDOக்களிடம் வழங்கலாம்.
காஞ்சிபுரம் ( கி.ப ): 044-27277620
வாலாஜாபாத் ( வ.ப ): 044-27256031
உத்திரமேரூர் ( வ.ப ): 044-27272233
ஸ்ரீபெரும்புதூர் ( வ.ப ): 044-27162235
குன்றத்தூர் ( வ.ப ): 044-27174152
காஞ்சிபுரம் ( வ.ப ): 044-27277620
News March 5, 2026
காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


