News September 18, 2025

திருவள்ளூர்: பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிரடி தீர்ப்பு

image

ஆவடி காவல் ஆணையரத்திற்குட்பட்ட பட்டாபிராம் பகுதியில் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடூமை செய்த வழக்கில் வினோத் என்பவரை பட்டாபிராம் போலீசார் ஏற்கனவே கைது செய்தனர். பின்னர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தியிருந்த நிலையில் இன்று 17.09.2025 வழக்கு விசாரணை முடிந்து அவருக்கு 35 ஆண்டுகள் சிறைதண்டனை மற்றும் ரூ.40,000 அபராதம் விதித்து திருவள்ளூர் போக்சோ சிறப்பு நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது.

Similar News

News September 18, 2025

திருவள்ளூர்: குறைந்த விலையில் வாகனம் வாங்க வாய்ப்பு

image

திருவள்ளூர் மாவட்ட வருவாய்த் துறையில் பயன்பாட்டில் இல்லாத வாகனங்கள் அக்டோபர் 7 ஆம் தேதி காலை 10 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளது. ஏலத்தில் பங்கேற்க விரும்புவோர், மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் டி.பிரிவு தலைமை உதவியாளரை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார். இது குறைந்த விலையில் வாகனம் வாங்க விரும்புவோருக்கு நல்ல வாய்ப்பு. ஷேர் பண்ணுங்க.

News September 18, 2025

திருவள்ளூர்: பட்டாவில் திருத்தம் செய்யனுமா? செம்ம ஈஸி!

image

தமிழக அரசால் பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் மற்றும் புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். அடுத்து வரும் ஜமாபந்தியில் இவை பரிசீலிக்கப்பட்டு, மாற்றங்கள் செய்யப்படும். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

News September 18, 2025

திருவள்ளூரில் வெளுக்க போகும் மழை

image

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், ராணிப்பேட்டை, வேலுார், காஞ்சிபுரம் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளில் மணிக்கு, 40 முதல் 50 கி.மீ., வேகத்திலும், இடையிடையே, 60 கி.மீ., வேகத்திலும், சூறாவளிக்காற்று வீசக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!