News September 18, 2025
திருச்சி: பொதுமக்கள் நடமாட தடை – கலெக்டர்

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், அனியாப்பூர் கிராமம், வீரமலை பாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் இடத்தில், வரும் 18 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற உள்ளது. ஆகவே இப்பகுதியில் காலை 7:30 மணி முதல் மாலை 5:30 மணி வரையும், மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரையும் பொதுமக்கள் நடமாடவோ, கால்நடை மேய்ச்சலில் ஈடுபடுவோ கூடாது என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 18, 2025
திருச்சி: 10th, ITI போதும் அரசு துறையில் வேலை!

திருச்சி மக்களே நாளையே கடைசி நாள்! தேர்வு இல்லாமல் அரசு வேலையை தவறவிடாதீர்கள் ! தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்படவுள்ளது.10th, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். செப்.,19 நாளையே கடைசி நாள் என்பதால் வேலை தேடுபவர்கள் <
News September 18, 2025
திருச்சி: கால்நடை வளர்ப்பு பயிற்சிக்கு அழைப்பு

திருச்சி கொட்டப்பட்டில் செயல்பட்டுவரும் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சிமையத்தில், ஆடுவளர்ப்பு பயிற்சி 22.09.2025 அன்றும், நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி 25.09.2025 அன்றும், கறவைமாடு வளர்ப்பு பயிற்சி 26.09.2025 அன்றும் நடைபெற உள்ளது. விருப்பமுள்ள மக்கள் ரூ.590/- செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளுமாறு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது
News September 18, 2025
திருச்சியில் இன்று முகாம் நடைபெறும் இடங்கள்!

நமது திருச்சியில் இன்று 18.09.2025 உங்களுடன் ஸ்டாலின் திட்டம் நடைபெறும் இடங்கள்
1.கூத்தப்பர்
BHEL குடியிருப்பு வளாகம், கைலாசபுரம்
2.கல்லக்குடி
டால்மியா மக்கள் மன்ற திருமண மண்டபம், கல்லக்குடி
3.மணிகண்டம்
சமுதாயக்கூடம், அதவத்தூர்
4.வையம்பட்டி
மாரியம்மன் கோவில் அருகில், நடுப்பட்டி
5.தா.பேட்டை
அரசு மேல்நிலைப்பள்ளி, பைத்தம்பாறை
6.உப்பிலியபுரம்
RKN திருமண மண்டபம், எரக்குடி
SHARE பண்ணுங்க!