News April 12, 2024
செங்கல்பட்டு அருகே விபத்து 6 பேர் காயம்

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் அடுத்த கல்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் இன்று (ஏப்.12) சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த வேன் மீது வேகமாக வந்த ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 5 பெண்கள் உட்பட 6 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்த 6 பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 24, 2025
செங்கல்பட்டு: BIRTH CERTIFICATE கிடைக்க ஈஸி வழி!

செங்கல்பட்டு மக்களே.. உங்களது பிறப்பு சான்றிதழ் பழையதாகிவிட்டதா? அல்லது தொலைவிட்டதா? கவலை வேண்டாம். இங்கு <
News December 24, 2025
செங்கல்பட்டு உழவர் சந்தையில் காய்களின் விலை

செங்கல்பட்டு உழவர் சந்தையில் (பெ.வெங்காயம்) ரூ.28,(சி-வெங்காயம்) ரூ.50
(தக்காளி) ரூ.37, (பச்சை மிளகாய்) ரூ.42,(பீட்ரூட்) ரூ.38, (உருளைக்கிழங்கு) ரூ.30, (வாழைப்பூ) ரூ.16, (குடைமிளகாய்) ரூ.49,(பாகற்காய்) ரூ.34, (சுரைக்காய்) ரூ.31, (அவரைக்காய்) ரூ.37, (முட்டைக்கோஸ்) ரூ.27, (கேரட்) ரூ.39,(காலிஃபிளவர்) ரூ.27, (கொத்தவரை) ரூ.45, (தேங்காய்) ரூ.70, (பூண்டு) ரூ.96, (இஞ்சி) ரூ.75 விலையில் விற்பனையாகிறது.
News December 24, 2025
செங்கல்பட்டு: போலி மருத்துவர் கையும் களவுமாக மாட்டினார்

துரைப்பாக்கத்தில் ‘தனியார் கிளினிக்’ நடத்தி வந்த விஜயகுமார் (38) என்பவர், முறையான மருத்துவப் படிப்பு இன்றி 10 ஆண்டுகளாக சிகிச்சை அளித்து வந்தது ஆய்வில் தெரியவந்தது. மேற்கு வங்கத்தில் MBBS படித்ததாக போலி சான்றிதழ் வைத்திருந்த அவரை, மருத்துவக் குழுவினர் கண்டறிந்தனர். இணை இயக்குனர் மீனாட்சி சுந்தரி அளித்த புகாரின் பேரில், கண்ணகி நகர் போலீசார் விஜயகுமாரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


