News September 18, 2025
சுற்றுலா அழைத்து செல்வதாக கூறி பண மோசடி

காஞ்சான்காடு பகுதியை சேர்ந்த பிரவின் ஜோஸ் உட்பட 6 பேர் சிங்கப்பூர் சுற்றுலா செல்ல திருவனந்தபுரம் தனியார் டிராவல் ஏஜென்சியிடம் ரூ3,36,400 அளித்துள்ளனர். ஒரு ஆண்டுகளாகியும் வெளிநாட்டுக்கு அழைத்து செல்லாததால் ஏஜென்சி மேலாளர் அகஸ்டின்தாஸ் உட்பட 2 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. அதில் திருவட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர் களியக்காவிளையில் அகஸ்டின் தாசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News November 15, 2025
குமரி: குடிப்பழக்கத்தால் இளைஞர் தற்கொலை

நாகர்கோவில் வடசேரி வாத்தியார் விளையை சேர்ந்தவர் அமல்ராஜ் (30) இவருக்கு திருமணமாகவில்லை. குடிப்பழக்கம் இருந்து வந்தது. இந்த நிலையில் வீட்டில் சண்டை போட்ட அவர் வீட்டில் படுக்கை அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அமல்ராஜ் தாயார் கொடுத்த புகாரின் பேரில் வடசேரி போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
News November 15, 2025
குமரி: 10th முடித்தால் மத்திய அரசு பள்ளியில் வேலை உறுதி!

குமரி மக்களே, மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14967 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10th, 12th, ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச.4ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.2,09,200 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிபடையில் தேர்வு செய்யப்படும். மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க <
News November 15, 2025
குமரி: இளைஞருக்கு 20 ஆண்டு சிறை

கடியப்பட்டினம் கல்லடி விளை தொழிலாளி வினோத்(31) நெய்யூரில் வேலை செய்தபோது, 22.5.2020 அன்று அப்பகுதி சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்று மிரட்டி பாலியல் தொந்தரவு அளித்தார். மேலும் சிறுமியை கொன்று விடுவேன் என மிரட்டினார். குளச்சல் மகளிர்போலீசார் வினோத்தை கைது செய்தனர். நாகர்கோவில் போக்சோ கோர்ட்டில் நடந்த வழக்கில் நேற்று நீதிபதி சுந்தரய்யா வினோத்துக்கு 20 ஆண்டு சிறை, ரூ.6,000 அபராதம் விதித்தார்.


