News April 12, 2024
29,000% உயர்ந்த தனியார் நிறுவனத்தின் பங்கு மதிப்பு

தனியார் நிறுவனம் ஒன்றின் பங்கு மதிப்பு 3 ஆண்டுகளில் 29,287% அதிகரித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. இயாந்திரா வென்சர்ஸ் என்ற நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பு, 2021 மார்ச்சில் ₹3.28ஆக இருந்தது. அது தற்போது ₹963.90ஆக அதிகரித்துள்ளது. அதாவது 3 ஆண்டுகளில் 29,287% உயர்ந்துள்ளது. ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அந்நிறுவனம், தகவல் தொழில்நுட்ப சேவைகளில் ஈடுபட்டுள்ளது.
Similar News
News August 13, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: அறிவுடைமை ▶குறள் எண்: 426 ▶குறள்: எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவ தறிவு. ▶ பொருள்: உயர்ந்தோர் வழியில் உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ அதற்கேற்ப நடந்து கொள்வதே அறிவாகும்.
News August 13, 2025
3 ஆண்டுகளில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு

தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் TRB ராஜா தெரிவித்துள்ளார். CM ஸ்டாலின் முயற்சியின் காரணமாக கடந்த 3 ஆண்டுகளில் ₹10.32 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஈரோடு மாவட்டத்தில் போதிய இடவசதி கிடைத்தால் சுற்றுச்சூழல் பாதிக்காத அளவில் IT பூங்கா கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
News August 13, 2025
கவர்ச்சி கேரக்டர்களுக்கே அழைக்கிறார்கள்: பூஜா

இந்தி சினிமாவில் தன்னை கவர்ச்சி கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க அழைப்பதாக நடிகை பூஜா ஹெக்டே வேதனை தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கில் தான் நடித்த படங்களை அவர்கள் பார்க்கவில்லை என தான் நினைப்பதாகவும் கூறினார். ரெட்ரோ படத்தில் ருக்மிணி கதாப்பாத்திரமாக தன்னை மாற்றிய இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்க்கு இந்த இடத்தில் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.