News April 12, 2024
29,000% உயர்ந்த தனியார் நிறுவனத்தின் பங்கு மதிப்பு

தனியார் நிறுவனம் ஒன்றின் பங்கு மதிப்பு 3 ஆண்டுகளில் 29,287% அதிகரித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. இயாந்திரா வென்சர்ஸ் என்ற நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பு, 2021 மார்ச்சில் ₹3.28ஆக இருந்தது. அது தற்போது ₹963.90ஆக அதிகரித்துள்ளது. அதாவது 3 ஆண்டுகளில் 29,287% உயர்ந்துள்ளது. ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அந்நிறுவனம், தகவல் தொழில்நுட்ப சேவைகளில் ஈடுபட்டுள்ளது.
Similar News
News November 8, 2025
திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்

கரூரில் Ex அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, MR விஜயபாஸ்கர் இருவரும் மாறி மாறி மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் சேர்த்து வருகின்றனர். இந்த பரபரப்பான அரசியல் சூழலில் கரூர் மாவட்ட திமுக முக்கிய நிர்வாகிகளாக இருந்த EX தாந்தோணி நகரக் கழக செயலாளர் ரவி, துணை செயலாளர் K.மகாதேவன், வடக்கு நகர வர்த்தக அணி துணை அமைப்பாளர் N.பாலாஜி ஆகியோர் EPS முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளனர்.
News November 8, 2025
Nobel Prize: முதல் முதலாக வென்றது இவர்கள் தான்!

நோபல் பரிசு, உலகளவில் பெருமைக்குரிய விருதாக கருதப்படுகிறது. தனக்கு நோபல் பரிசு வேண்டும் என டிரம்ப் கேட்டதற்கும் இதுவே காரணம். ஸ்வீடன் விஞ்ஞானி ஆல்ஃபிரட் நோபல் தான், நோபல் பரிசை நிறுவினார். இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய பிரிவுகளில் வழங்கப்படுகிறது. 1901-ல் முதலாக இந்த நோபல் பரிசை வென்றவர்கள் யார் தெரியுமா? மேலே உள்ள போட்டோக்களை SWIPE செய்து பாருங்கள்.
News November 8, 2025
பெரியார், அண்ணா போல பணியாற்றும் உதயநிதி: CM

இளைஞர்களை கட்சிக்குள் ஈர்த்து, பாசறைகளை நடத்தி, அவர்களை பேச்சாளர்களாகவும் ஆய்வாளர்களாகவும் உருவாக்கி இருக்கிறார் DCM உதயநிதி என திமுக நடத்தும் அறிவு திருவிழாவில், ஸ்டாலின் பாராட்டியுள்ளார். இதுதான் பெரியார், அண்ணா செய்த பணி என குறிப்பிட்ட அவர், ஒரு தந்தை என்பதைவிட, இயக்கத்தின் முதன்மை தொண்டனாக உதயநிதியின் செயல்பாட்டில் பெரும் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளார்.


