News September 17, 2025

காரைக்கால் அருகே மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

காரைக்கால் அடுத்த கோட்டுச்சேரி பகுதியில் உள்ள கிராம தொழிற்பேட்டை மையத்தில் மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ் இன்று திடீர் கள ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களின் செயல்பாடுகள், உற்பத்தி திறன், வணிகம் குறித்து ஆய்வு செய்ததுடன் நிறுவனங்களின் தேவைகள் குறித்தும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் அதிகாரியுடன் ஆட்சியர் கலந்துரையாடினார்கள்.

Similar News

News September 17, 2025

புதுவையில் அரசு பள்ளியில் ஆட்சியர் ஆய்வு

image

புதுவை மாநிலம் பாகூர் கொம்யூன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட புதுக்குப்பம் அரசு தொடக்க பள்ளியில், இன்று மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் ஆய்வு மேற்கொண்டார்கள். அப்பொழுது பள்ளியில் படிக்கும் மாணவர்களிடம் கல்வித்திறனை கேட்டறிந்த ஆட்சியர் மாணவர்களிடம் கல்வி சம்பந்தமாக கலந்துரையாடினார்கள். மேலும் நன்கு படிக்க வேண்டும் எனவும் மாணவர்களிடம் ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

News September 17, 2025

புதுச்சேரியில் மத்திய அரசு திட்ட துவக்க விா

image

ஆரோக்கியமான பெண்கள், வலிமையான குடும்பம் சுவஸ்த்ய நாரி சக்த் பரிவார் அபியான் என்கிற புதிய திட்டத்தை பாரத பிரதமர் மோடி அறிவித்து துவக்கி உள்ளார். கம்பன் கலையரங்கில் இந்த திட்டத்தின் துவக்க விழா நடந்தது. இதில் கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News September 17, 2025

பெரியார் சிலைக்கு கலெக்டர் மரியாதை

image

காரைக்கால் மாவட்ட அரசு சார்பில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவில், இன்று (17.09.2025) ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள பெரியார் சிலைக்கு அமைச்சர் னதிருமுருகன் தலைமையில், காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ் முன்னிலையில், மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இதில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லட்சுமி சௌஜன்யா, சார்பு ஆட்சியர் பூஜா ஆகியோர் மலர்தூவி மரியாதை செய்தனர்.

error: Content is protected !!