News September 17, 2025
நாகை: ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

இந்தியாவில் மிக முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு விளங்குகிறது. அப்படிப்பட்ட ஆதார் கார்டு தொலைந்து விட்டால் கவலை வேண்டாம். <
Similar News
News September 17, 2025
நாகையில் மக்கள் குறைதீர் கூட்டம்

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் நாள் கூட்டம் இன்று(செப்.17) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்ரண்ட் செல்வகுமார் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து குறைகள் கேட்டு அறிந்தார். பின்னர் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 23 மனுக்களை பெற்ற அவர், விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
News September 17, 2025
பெரியார் சிலைக்கு எம்எல்ஏ நாகை மாலி மரியாதை

தமிழகம் முழுவதும் தந்தை பெரியாரின் 147வது பிறந்தநாள் இன்று(செப்.17) கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வகையில், கீழ்வேளூர் எம்எல்ஏ நாகை மாலி, பெரியாரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில், CPIM கட்சியின் நாகை நகரச் செயலாளர் வெங்கடேசன், மாணவர் சங்கம் மாவட்ட செயலாளர் முகேஷ் கண்ணன், CITU மாவட்ட துணைச் செயலாளர் ஜீவா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
News September 17, 2025
இந்துசமய அறநிலையதுறை எச்சரிக்கை

நாகப்பட்டினம்-கீழ்வேளூர் புறவழிச்சாலை பொரவச்சேரி என்ற இடத்தில் கந்தசாமி கோயிலுக்கு சொந்தமான இடங்களில், தனிநபர் ஆக்கிரமிப்பு செய்ய முற்படுவதாக புகார் வந்தது. அதன் அடிப்படையில், நாகை இந்துசமய அறநிலையத்துறை சார்பில், கோயில் நிருவாகம் சார்பில், சம்பந்தப்பட்ட இடங்களில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.