News September 17, 2025
திருவாரூர்: ஆதார் கார்டு தொலைந்து விட்டதா ?

இந்தியாவில் மிக முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு விளங்குகிறது. அப்படிப்பட்ட ஆதார் கார்டு தொலைந்து விட்டால் கவலை வேண்டாம். <
Similar News
News September 17, 2025
திருவாரூரில் கல்வி கடன் முகாம்

திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்தியன் ஓவர்சிஸ் இணைந்து நடத்திய மாபெரும் கல்வி கடன் முகாமில் 383 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.4 கோடியே 99 லட்சம் மதிப்பில் கல்வி கடனுக்கான வங்கி வரைவோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வ.மோகனச்சந்திரன் வழங்கினார். இந்நிகழ்வில் ஏராளமான மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
News September 17, 2025
திருவாரூர்: பெரியார் சிலைக்கு மரியாதை செய்த எம்.எல்.ஏ

தந்தை பெரியார் 147-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் க.மாரிமுத்து எம்எல்ஏ பெரியரின் சிலைக்கு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தினார், இந்நிகழ்வில் முத்துப்பேட்டை சிபிஐ ஒன்றிய செயலாளர் எம்.உமேஷ்பாபு உடன் இருந்தார். மேலும் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
News September 17, 2025
திருவாரூர்: அரசு பள்ளி மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு

கூத்தாநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று தமிழ்நாடு அரசு பள்ளி கல்வி துறையின் உத்தரவு படி தந்தை பெரியார் 147 ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி காலை வழிபாட்டு கூட்டத்தில் நடைபெற்றது. இன்றைய தினம் சமூக நீதி நாளாக கொண்டாடப்படுவதையொட்டி தலைமை ஆசிரியர் சமூக நீதி நாள் உறுதிமொழியை வாசிக்க மாணவர்கள் திரும்ப சொல்லி உறுதியேற்றனர்.