News September 17, 2025

நாமக்கல்: வாழ்வில் செல்வம் பெருக நைனாமலை வழிபாடு!

image

நாமக்கல்லில் முக்கிய வழிபாட்டு தலங்களில் ஒன்றாக விளங்கும், நைனாமலை வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் புரட்டாசி மாத வழிபாடு என்பது மிகச் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். இன்றைய தினம் புரட்டாசி மாதம் தொடங்கியுள்ள நிலையில், பக்தர்கள் அசைவம் சாப்பிடாமல் விரதம் இருந்து இம்மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் வரதராஜ பெருமாளை வழிபாடு செய்வர். இவ்வழிபாட்டின் மூலம் வாழ்வில் நிம்மதியும், செல்வமும் பெருகும் என்பது ஐதீகம்.

Similar News

News September 17, 2025

விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய எம்பி மாதேஸ்வரன்

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கூடுதல் வளாகத்தில் நடைபெற்ற மேரா யுவ பாரத் திட்டத்தின் கீழ் இளைஞர் மன்றங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழாவில் நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் கலந்து கொண்டு விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்களை வழங்கினார். மாவட்ட இளையோர் அலுவலர் கீர்த்தனா உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள், மாவட்ட சமூகநலத்துறை அலுவலர், மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News September 17, 2025

பாண்டமங்கலம்: புரட்டாசி வழிபாடு

image

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வட்டம் பாண்டமங்கலம் பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் இன்று புரட்டாசி மாத பிறப்பைமுன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு மூலவர் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகமும் பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபம் காண்பிக்கப்பட்டது. காலை முதல் பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

News September 17, 2025

நாமக்கல்: மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்!

image

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி மைய வளாகத்தில் வரும் செப்.19ல் காலை 10.30 மணி அளவில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. 10, 12, டிப்ளமோ, ஐடிஐ, பட்டப்படிப்பு முடித்தவர்கள் பங்கேற்று பயன்பெறலாம். இதில் பங்கேற்க வேலையளிப்போரும், வேலைநாடுநரும் tnprivate jobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு: 04286222260 எண்ணில் அழைக்கவும்.

error: Content is protected !!