News September 17, 2025
இராமநாதபுரம் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

இராமநாதபுரம் (செப், 17) பிற்பகல் 1 மணி முதல் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய துவங்கும். மாவட்டத்தில் குறிப்பாக இராமநாதபுரம் முதுகுளத்தூர், பரமக்குடி, பார்த்திபனூர், கமுதி, அபிராமம் ,மஞ்சூர் ,மீசல் ,கடலாடி, திருவாடானை, பாண்டியூர், தூவல், சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் அறிவித்துள்ளது. வெளியில் சென்றுள்ள நன்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
Similar News
News September 17, 2025
ராமநாதபுரம்: பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1500

ராம்நாடு மக்களே; 2025-2026ம் கல்வியாண்டிற்கான தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு 11.10.2025 அன்று நடைபெறவுள்ளது. அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் இத்தேர்வு நடத்தப்படும். ஆர்வமுள்ள மாணவர்கள் விண்ணப்பங்களை www.dge.tn.gov.in இணையத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரிடம் சமர்பிக்கலாம். (தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1500 வழங்கப்படும்) SHARE IT
News September 17, 2025
ராமநாதபுரம்: வேலைநாடும் இளைஞர்கள் கவனத்திற்கு

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமானது வரும் செப்.19 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மதியம் 2.00 மணி வரை ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ ஆகிய கல்வித்தகுதி உடைய வேலைநாடுநர்கள் கலந்து கொள்ளவும். மேலும் தகவலுக்கு <
News September 17, 2025
ராமநதபுரம்: மின்சாரம் தாக்கி பெண் பலி

தங்கச்சிமடம் விக்டோரியா நகரை சேர்ந்த மீனவர் வினோ என்பவரின் மனைவி பிரதிஷ்டா (30). இவர் நேற்று (செப் 16) மாலை வீட்டில் குளிக்கச் சென்ற போது மின் மோட்டார் சுவிட்சை ஆன் செய்துள்ளார். அப்போது சுவிட்சில் இருந்து மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தங்கச்சிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகலா விசாரிக்கிறார். பிரதிஷ்டா தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.