News April 12, 2024
மனைவி, 7 குழந்தைகளை கொன்ற கணவன்

பண நெருக்கடி காரணமாக மனைவி மற்றும் 7 குழந்தைகளை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த சஜ்ஜத் கோகர், போதிய வருமானம் இல்லாததால் மனைவியுடன் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த அவர், தனது மனைவி (கவுசர்), 8 முதல் 10 வயதுடைய 4 மகள்கள், 3 மகன்களை கோடரியால் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளார். குற்றத்தை ஒப்புக்கொண்ட அவரை, போலீசார் கைது செய்துள்ளனர்.
Similar News
News November 8, 2025
பெரியார், அண்ணா போல பணியாற்றும் உதயநிதி: CM

இளைஞர்களை கட்சிக்குள் ஈர்த்து, பாசறைகளை நடத்தி, அவர்களை பேச்சாளர்களாகவும் ஆய்வாளர்களாகவும் உருவாக்கி இருக்கிறார் DCM உதயநிதி என திமுக நடத்தும் அறிவு திருவிழாவில், ஸ்டாலின் பாராட்டியுள்ளார். இதுதான் பெரியார், அண்ணா செய்த பணி என குறிப்பிட்ட அவர், ஒரு தந்தை என்பதைவிட, இயக்கத்தின் முதன்மை தொண்டனாக உதயநிதியின் செயல்பாட்டில் பெரும் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளார்.
News November 8, 2025
பிரபல தமிழ் நடிகர் கவலைக்கிடம்

பிரபல இயக்குநரும், நடிகருமான <<18174237>>V.சேகர்<<>> உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. வீட்டில் தவறி விழுந்ததில் தலையில் காயமடைந்த அவர் ஒருவார காலமாக சென்னை போரூர் ராமச்சந்திரா ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருகிறார். V.சேகர் விரைவில் மீண்டு வர பிரார்த்தனை செய்வதாக FEFSI சார்பில் RK செல்வமணி அறிக்கை வெளியிட்டிருந்தார். கோலிவுட் சினிமா பிரபலங்கள் பலரும் ஹாஸ்பிடலில் V.சேகரை நேரில் சென்று பார்த்து வருகின்றனர்.
News November 8, 2025
4,000 ஆண்டுகளாக எரியும் தீ; அணையாத மர்மம்

புயல், மழை, பனி, சூறைக்காற்று என எதற்கும் அணையாத தீயை பார்த்ததுண்டா?அசர்பைஜானில் 4000 ஆண்டுகளாக ’யனார் தாக்’ என்ற மலை கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது. நிலத்தடியில் இருக்கும் இயற்கை எரிவாயு கசிவதால் இந்த அதிசயம் நிகழ்கிறது என்கின்றனர். ஒரு காலத்தில் இதுபோன்ற மலைகள் அந்நாட்டில் அதிகமான இருந்தன. காலப்போக்கில் எரிவாயு எடுக்கும் பணிகள் தொடங்கியதால் தற்போது இந்த ஒரு மலைதான் தப்பியுள்ளது.


