News September 17, 2025

விருதுநகர்: காவல்துறை சிசிடிவி கேமரா சேதம், 4 பேர் கைது

image

சித்தலக்குண்டு பேருந்து நிறுத்தத்தில் காவல்துறை சார்பில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட நிலையில் நேற்று இந்த சிசிடிவி கேமராக்களை மர்மநபர்கள் சேதப்படுத்தியதாக தகவல் வந்தது. இந்நிலையில் திருச்சுழி போலீசாரின் விசாரணையில் கேமராக்களை சேதப்படுத்தியதாக வயல்சேரியை சேர்ந்த மணிகண்டன், சித்தலக்குண்டை சேர்ந்த தமிழ்சிங்கம், ராம்குமார் மற்றும் ஒரு சிறுவன் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Similar News

News September 17, 2025

அருப்புக்கோட்டையில் சாமி சிலை உடைப்பு

image

அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலையம்பட்டி அருகே பொய்யாங்குளம் கிராமத்தில் அமைந்துள்ளது இருவாக்காளியம்மன் கோவில். இன்று காலையில் இருவக்காளியம்மன் சுவாமியின் சிலை உடைக்கப்பட்டு இருப்பது கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தகவல் அறிந்து வந்த அருப்புக்கோட்டை தாலுகா காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 17, 2025

விருதுநகர் மாவட்டத்தின் அடிப்படை உதவி எண்கள்

image

▶️மாவட்ட கட்டுப்பாட்டு அறை -1077
▶️மாவட்ட ஆட்சியர் அலுவலகம் -04562 – 252600, 252601, 252602, 252603
▶️காவல் கட்டுப்பாட்டு அறை -100
▶️விபத்து உதவி எண் -108
▶️தீ தடுப்பு, பாதுகாப்பு -101
▶️விபத்து அவசர வாகன உதவி -102
▶️குழந்தைகள் பாதுகாப்பு -1098
▶️பேரிடர் கால உதவி – 1077
▶️பாலின துன்புறுத்தல் தடுப்பு உதவி – 1091
▶️சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு பற்றி தகவல் அளிக்க உதவி எண் – 9443967578 *ஷேர் பண்ணுங்க

News September 17, 2025

விருதுநகர்: வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே பலி

image

மதுரை – தூத்துக்ககுடி தேசிய நெடுஞ்சாலையில் கல்குறிச்சி புற வழிச்சாலையில் நேற்று இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் வழிப்போக்கர் ஒருவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இறந்த நபர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்த நிலையில் இச்சம்பவம் குறித்து மல்லாங்கிணறு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!