News September 17, 2025
கடலூர்: கிணற்றில் தவறி விழுந்து பெண் உயிரிழப்பு

குறிஞ்சிப்பாடியை சேர்ந்தவர் பாஸ்கர் (44). இவரது மனைவி சத்தியவாணி (42). இவர் பெரியார் நகரில் உள்ள ராமலிங்கம் வீட்டில் வீட்டு வேலை செய்து வந்தார். நேற்று காலை வீட்டு தோட்டத்தில் உள்ள 40 அடி ஆழமுள்ள கிணற்றின் அருகில் வேலை செய்யும் போது தவறி கிணற்றில் உள்ளே விழுந்த சத்தியவாணி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News September 17, 2025
கடலூர்: லஞ்சம் வாங்கிய காவலர் பணியிட மாற்றம்

கடலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் லாட்டரி டிக்கெட், போதை பொருட்கள் போன்றவற்றை தடுக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடலூர் முதுநகரில் லாட்டரி டிக்கெட் விற்பனை மற்றும் மாமூல் வாங்குவதற்கு துணை போனதாக எழுந்த புகாரில் சிக்கிய தனிப்பிரிவு போலீஸ்காரர் பாபு, கடலூர் ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி., ஜெயக்குமார் நேற்று உத்தரவிட்டார்.
News September 17, 2025
கடலூர்: செம்மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

விருத்தாசலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு மற்றும் போலீசார் நேற்று தே.கோபுராபுரம் பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தியபோது டிரைவர் தப்பியோடினார். லாரியை சோதனை செய்ததில், செம்மண் கடத்தி வந்தது தெரியவந்தது. உடனே போலீசார் வழக்கு பதிந்து, டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
News September 17, 2025
கடலூர்: ஆதார் கார்டில் இதை செய்துவிட்டீர்களா?

கடலூர் மக்களே! உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், இந்த <