News September 17, 2025
தேனி மாவட்டத்தில் வாக்குசாவடிகள் அதிகரிப்பு

கடந்த லோக்சபா தேர்தலின் போது 4 சட்டசபை தொகுதிகளில் 563 அமைவிடங்களில், 1226 ஓட்டுச்சாவடிகள் இருந்தன. தற்போதைய கணக்கெடுப்பு, மறுவரையறுதல் பணிக்குப்பின் 591 அமைவிடங்களில் 1394 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 28 அமைவிடங்கள் 168 ஓட்டுச்சாவடிகள் அதிகரித்துள்ளன. அதிகபட்சமாக பெரியகுளம் (தனி) தொகுதியில் 14 அமைவிடங்கள் 62 ஓட்டு சாவடிகள் அதிகரித்துள்ளது. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Similar News
News November 15, 2025
தேனி: கேஸ் சிலிண்டர் வைத்திருபோர் கவனத்திற்கு

கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்ய போனில் இருந்து ஒரு SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். இதுவே பாரத் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பி அலைச்சல் இல்லாமல் சிலிண்டரை புக்கிங் செய்யலாம். இத்தகவலை இல்லத்தரசிகளுக்கு ஷேர் பண்ணுங்க!
News November 15, 2025
தேனி: காசநோய் பாதிப்பால் ஒருவர் தற்கொலை

மயிலாடும்பாறை பகுதியை சேர்ந்தவர் பங்காரு (49). இவருக்கு காச நோய் ஏற்பட்ட நிலையில் அதற்காக 6மாதங்களாக சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இருந்தபோதிலும் அவர் மது குடித்து வந்துள்ளார். அதனால் அவருக்கு கடந்த ஒரு மாத காலமாக தீராத வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. வலியின் வேதனையினால் பங்காரு நேற்று முன்தினம் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார் சம்பவம் குறித்து மயிலாடும்பாறை போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
News November 14, 2025
தேனி: தலைவலியால் ஒருவர் விஷமருந்தி தற்கொலை.!

ஓடைப்பட்டி அருகே கரிச்சிபட்டியை சேர்ந்தவர் முருகன் (47). இவருக்கு 6 வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட விதத்தின் காரணமாக தீராத தலைவலி இருந்து வந்துள்ளது. அதற்கு சிகிச்சை எடுத்தும் பலனளிக்காத காரணத்தினால் 2 தினங்களுக்கு முன்பு முருகன் விஷம் அருந்தி உள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று (நவ.13) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து ஓடைப்பட்டி போலீசார் வழக்கு பதிவு.


