News September 17, 2025
சேலம்: சிறப்பு பேருந்துகள் 13 பேருந்து கூடுதலாக அறிவிப்பு!

திருமலை திருப்பதி தேவஸ்தான பிரமோற்சவ விழா வரும் 24ம் தேதி முதல் அக்டோபர் இரண்டாம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவிற்காக சேலம் போக்குவரத்து கழகம் சார்பில், சிறப்பு பேருந்துகள் 24ம் தேதி முதல் 2ஆம் தேதி வரை 13 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இரவு 9 மணி 9:30 மணி 10:30 மணி என பேருந்துகள் சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் என போக்குவரத்து நிர்வாகம் அறிவிப்பு.
Similar News
News September 17, 2025
சேலம் ரயில்வே கோட்டத்தின் முக்கிய அறிவிப்பு!

ஈரோடு-ஜோக்பானி (பீகார்) இடையே அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் வாராந்திர சிறப்பு ரயில் வரும் செப்.25- ஆம் தேதி முதல் இயக்கப்படுகிறது என்று சேலம் ரயில்வே கோட்டம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சேலம், காட்பாடி, அரக்கோணம், ஜோலார்பேட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரயில்களுக்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு நடைபெற்று வருகிறது.
News September 17, 2025
சேலம்: பட்டதாரிகளுக்கு ரூ.6 லட்சம் மானியம்!

சேலம் பட்டதாரிகளே..தொழில் முனைய விரும்புவரா நீங்கள்..? உங்கள் சொந்த ஊரில் உழவர் நல மையம் அமைக்க ரூ.6 லட்சம் மானியம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. மேலும், இந்தத் துறையில் இலவச சிறப்பு பயிற்சி பெற மாவட்ட வேளாண் பயிற்சி நிலையம், வேளாண்மை அறிவியல் நிலையத்தை அணுகலாம். இதற்கு விண்ணப்பிக்க இங்கே <
News September 17, 2025
மாவட்ட காவல் அலுவலகத்தில் குறைதீர்ப்பு சிறப்பு முகாம்

சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (செப்.17) மக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் தெரிவித்தார்.