News September 17, 2025
வேலூர்: ஒரு செயலி போதும்! அத்தனை பிரச்னைகளும் தீர்வு

“மெரி பஞ்சாயத்து” மொபைல் செயலி மூலம் கிராம மக்கள் இனி எல்லா விதமான புகார்களையும் நேரடியாகப் பதிவு செய்யலாம். இதில் உள்ள ‘Grievance/Complaint’ பிரிவில் பெயர், கிராமம் மற்றும் புகார் விவரங்களை உள்ளீடு செய்து, தேவையான ஆவணங்களையும் இணைக்கலாம். புகார் செய்தவுடன் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் புகாரின் நிலை மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரங்களை நேரடியாகக் கண்காணிக்க முடியும். ஷேர்
Similar News
News September 17, 2025
வேலூர்: சான்றிதழ்கள் பெறுவது இனி ரொம்ப ஈஸி..

வேலூர் மக்களே, உங்களுக்கு தேவையான 1.சாதி சான்றிதழ் 2.வருமான சான்றிதழ் 3.முதல் பட்டதாரி சான்றிதழ் 4.கைவிடப்பட்ட பெண் சான்றிதழ் 5.விவசாய வருமான சான்றிதழ் 6.சாதி கலப்பு திருமணச் சான்றிதழ் 7.குடியிருப்புச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை பெற <
News September 17, 2025
வேலூர்: சிறைக் கைதி மருத்துவமனையில் உயிரிழப்பு!

தி.மலை மாவட்டத்தை சேர்ந்த சங்கர் (77) என்பவர் பாலியல் குற்ற வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று, கடந்த 2023-ம் ஆண்டு முதல் இருந்து வேலூர் மத்திய சிறையில் இருந்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு சிறுநீரக பிரச்சனை ஏற்பட்டதால் கடந்த மாதம் 27-ம் தேதி வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இன்று (செப்டம்பர் 17) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
News September 17, 2025
வேலூர்: 10th போதும், மத்திய அரசு வேலை!

மத்திய புலனாய்வு துறையில் காலியாக உள்ள பாதுகாப்பு உதவியாளர் பணிக்கு 455 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு,
▶️கல்வித் தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி
▶️சம்பளம்: ரூ.21,700-ரூ.69,100
▶️வயது வரம்பு: 18-27 வரை (கணவரை இழந்த பெண்கள், விவகாரத்து பெற்றவர்கள், சட்டப்படி பிரிந்து வாழ்பவர்களுக்கு வயது வரம்பில் தளர்வு)
கடைசி தேதி: செப்டம்பர் 28
<