News September 17, 2025

தருமபுரி: ஒரு செயலி போதும்! அத்தனை பிரச்னைகளும் தீர்வு

image

<>”மெரி பஞ்சாயத்து” மொபைல் செயலி<<>> மூலம் கிராம மக்கள் இனி எல்லா விதமான புகார்களையும் நேரடியாகப் பதிவு செய்யலாம். இதில் உள்ள ‘Grievance/Complaint’ பிரிவில் பெயர், கிராமம் மற்றும் புகார் விவரங்களை உள்ளீடு செய்து, தேவையான ஆவணங்களையும் இணைக்கலாம். புகார் செய்தவுடன் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் புகாரின் நிலை மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரங்களை நேரடியாகக் கண்காணிக்க முடியும். ஷேர்

Similar News

News September 17, 2025

தர்மபுரி: பெற்றோர் கண்டித்ததால் உயிரை மாய்த்த மாணவி

image

தர்மபுரி மாவட்டம் ஒட்டப்பட்டியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி வைஷ்ணவி, அதிக நேரம் செல்போன் பயன்படுத்தியதால் பெற்றோரின் கண்டிப்புக்கு ஆளானார். இதனால் மனமுடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து மதிகோன்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News September 17, 2025

தருமபுரி: தொடங்கியது புரட்டாசி! இங்கெல்லாம் கட்டாயம் போங்க

image

இந்த ஆண்டு புரட்டாசி மாதம் இன்று தொடங்குகிறது. இந்த மாதம் பெருமாளுக்கு மிகவும் உகந்த மாதமாகும். மேலும் இந்த மாதத்தில் விரதம் இருப்பதும், சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபடுவதும் மிகவும் சிறப்பு வாய்ந்தது என நம்பப்படுகிறது. தருமபுரியில் இருக்கும் சில முக்கிய பெருமாள் கோயில்
✅ தருமபுரி பரவாசுதேவப் பெருமாள் கோயில்
✅ குமாரசாமிப்பேட்டை சென்னகேசவ பெருமாள் கோயில்
✅ கோவிலூர் சென்னகேசவ பெருமாள் கோயில். (SHARE)

News September 17, 2025

தருமபுரி: 10ஆம் வகுப்பு போதும்! ரூ.69,100 வரை சம்பளம்

image

மத்திய புலனாய்வு துறையில் காலியாக உள்ள பாதுகாப்பு உதவியாளர் பணிக்கு 455 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு,
▶️ கல்வித் தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி
▶️ சம்பளம்: ரூ.21,700-ரூ.69,100
▶️ வயது வரம்பு: 18-27 வரை (கணவரை இழந்த பெண்கள், விவகாரத்து பெற்றவர்கள், சட்டப்படி பிரிந்து வாழ்பவர்களுக்கு வயது வரம்பில் தளர்வு)
▶️ கடைசி தேதி: செப்டம்பர் 28
இந்த <>லிங்க் <<>>மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!