News September 17, 2025
சென்னையில் பெரியாரின் கடைசி பேச்சு…

தந்தை பெரியாரின் 147ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. பெரியாருக்கும், சென்னைக்கும் உணர்வுபூர்வமான ஒரு இணைப்பு உள்ளது. ஆம், தந்தை பெரியார் கடைசிக் கூட்டம் சென்னை, தியாகராய நகரில், டிசம்பர் 19, 1973 அன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில், “சமுதாயத்தில் சாதி முறையையும், இழிநிலையையும் ஒழித்துக்கட்ட திராவிடர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடவேண்டும் என்றார்”. அதுவே அவரின் கடைசிப் பேச்சாக மைந்தது.
Similar News
News September 17, 2025
சென்னை மெட்ரோ WhatsApp டிக்கெட் சேவை நிறுத்தம்

சென்னை மெட்ரோ ரயில் பயணிகளுக்கான WhatsApp ஆன்லைன் டிக்கெட் சேவை தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக செயல்படவில்லை.
இதனால் பயணிகள் CMRL மொபைல் ஆப், Paytm, PhonePe, சிங்காரா சென்னை கார்டு, CMRL Travel Card போன்ற வழிகளில் டிக்கெட் பெறலாம். அத்துடன் பயணிகள் கவுண்டரிலும் டிக்கெட் பெற வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது.
News September 17, 2025
சென்னை: புரட்டாசி முதல் நாள் இங்கே செல்லுங்கள்

கடன் தொல்லையை நீக்கும் கங்காதீசுவரர்: சென்னை புரசைவாக்கத்தில் பிரசித்திபெற்ற கங்காதீசுவரர் கோயில் உள்ளது. புரட்டாசி முதல் நாளான இன்று இங்கு வந்து தீபம் ஏற்றி வழிபட்டால் EMI உள்ளிட்ட அனைத்து கடன் தொல்லைளும் நீங்கி வீட்டில் செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பியாக உள்ளது. மேலும், இறைவனை மனதார வேண்டினால், சகல பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம். கடன் பிரச்சனை உள்ளவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News September 17, 2025
JUST IN: சென்னை- பிரபல நடிகர் மருத்துவமனையில் அனுமதி

உடல் நலக்குறைவால் இன்று (செப்.17) காலை நடிகர் ரோபோ சங்கர் சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர் வேலை காரணமாக LOW B.P ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால்அவருக்கு 2நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மஞ்சள் காமாலையால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில் மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.