News September 17, 2025
வேலூர்: இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

பள்ளிகொண்டா பகுதியை சேர்ந்த அறிவுக்கரசி (35). இவரது கணவர் குறளமுதன் இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக அறிவுக்கரசி கந்தனேரி பகுதியில் குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று திடீரென அறிவுக்கரசி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த பள்ளிகொண்டா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News September 17, 2025
வேலூர்: சிறைக் கைதி மருத்துவமனையில் உயிரிழப்பு!

தி.மலை மாவட்டத்தை சேர்ந்த சங்கர் (77) என்பவர் பாலியல் குற்ற வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று, கடந்த 2023-ம் ஆண்டு முதல் இருந்து வேலூர் மத்திய சிறையில் இருந்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு சிறுநீரக பிரச்சனை ஏற்பட்டதால் கடந்த மாதம் 27-ம் தேதி வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இன்று (செப்டம்பர் 17) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
News September 17, 2025
வேலூர்: 10th போதும், மத்திய அரசு வேலை!

மத்திய புலனாய்வு துறையில் காலியாக உள்ள பாதுகாப்பு உதவியாளர் பணிக்கு 455 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு,
▶️கல்வித் தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி
▶️சம்பளம்: ரூ.21,700-ரூ.69,100
▶️வயது வரம்பு: 18-27 வரை (கணவரை இழந்த பெண்கள், விவகாரத்து பெற்றவர்கள், சட்டப்படி பிரிந்து வாழ்பவர்களுக்கு வயது வரம்பில் தளர்வு)
கடைசி தேதி: செப்டம்பர் 28
<
News September 17, 2025
வேலூரில் உள்ள பெருமாள் கோயில்கள்!

▶️ பள்ளிகொண்டா உத்தர ரங்கம் கோயில்
▶️ வேலூர் திருவேங்கடமுடையான் பஜனை கோயில்
▶️ வேலப்பாடி வரதராஜ பெருமாள் கோயில்
▶️ தேன்பள்ளி தர்மராஜா கோயில்
▶️ பழைய காட்பாடி வரதராஜப் பெருமாள் கோயில்
▶️ வேங்கட கிருஷ்ணன் கோவில், வேலூர்
*மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க*