News September 17, 2025
19 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்

தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. அதன்படி, மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, மதுரை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 17, 2025
திறக்காத 5 கதவுகள்

உலகில் தற்போதுவரை பல விஷயங்கள் தெரியாமல் உள்ளன. வரலாறு தொடர்புடைய சில இடங்களில் என்ன இருக்கிறது என்று இதுவரை யாருக்கும் தெரியவில்லை. பயத்தில் சில இடங்கள் மூடப்பட்டு இருக்கிறது. அதுபோன்று உலகின் இதுவரை திறக்கப்படாத 5 கதவுகள் என்ன என்று போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக பாருங்க. இதை தவிர வேறேதும் உங்களுக்கு தெரிந்தால் கமெண்ட்ல சொல்லுங்க.
News September 17, 2025
BREAKING: நடிகர் ரோபோ சங்கர் மயங்கி விழுந்தார்

பிரபல நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில், தனியார் TV நிகழ்ச்சி ஒன்றின் படப்பிடிப்பின்போது ரத்த அழுத்தம் காரணமாக திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனே அவரை மீட்டு துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் அனுமதித்துள்ளனர். ஏற்கெனவே மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்த ரோபோ சங்கர், அதிலிருந்து மெல்ல மீண்டு வந்தது கவனிக்கத்தக்கது.
News September 17, 2025
ASIA CUP: பும்ரா இடத்தில் யார்?

UAE மற்றும் பாகிஸ்தானுடனான ஆட்டங்களில் பெற்ற அசத்தலான வெற்றிகளின் மூலம் இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. இந்நிலையில், ஓமனுக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அர்ஷ்தீப், ஹர்சித் ராணா ஆகிய இருவரில் ஒருவருக்கு ஆசிய கோப்பையில் விளையாட வாய்ப்பு கிடைக்கலாம்.