News April 12, 2024
பிரதமர் மோடி பேசாமல் இருப்பது ஏன்?

தமிழகத்தின் நிதி பற்றாக்குறை குறித்து முதல்வர் ஸ்டாலின் அனுப்பிய கடிதத்திற்கு பிரதமர் மோடி பதில் தரவில்லை என்று தயாநிதி மாறன் கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், அண்ணாமலையைப் பற்றி பேசியதற்கு பதில் கூறிய பிரதமர் வெள்ள நிவாரணம் பற்றி ஏன் பேசவில்லை. தமிழகத்தின் தேவை குறித்து மோடி பேசாமல் இருப்பது ஏன்? தமிழக மக்களை பாஜகவினாரால் இனியும் ஏமாற்ற முடியாது எனக் கூறினார்.
Similar News
News August 16, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: அறிவுடைமை ▶குறள் எண்: 429 ▶குறள்: எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை அதிர வருவதோர் நோய். ▶ பொருள்: வருமுன் அறிந்து காத்துக்கொள்ளும் திறனுடையவர்களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய துன்பம் ஏற்படாது.
News August 16, 2025
திமுக கூட்டணியை உடைக்க முயற்சி: திருமாவளவன்

தூய்மை பணியாளர்களை வைத்து அரசியல் செய்வது அற்பமானது என திருமா விமர்சித்துள்ளார். அவர்களுக்கு நீதி கிடைப்பதை விட திமுக கூட்டணியை உடைப்பதே சிலரது நோக்கமாக இருப்பதாக கூறினார். சென்னையிலுள்ள 15 மண்டலங்களில் 11- யை தனியாருக்கு கொடுத்தது கடந்த அதிமுக ஆட்சியில் என்றும், அதற்கு அவர்களிடம் என்ன பதிலுள்ளது என கேட்டார். தற்போது 2 மண்டலங்களை தனியாருக்கு விட்ட திமுக அதனை திரும்பபெற கோரிக்கை விடுத்தார்.
News August 16, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஆகஸ்ட் 16 – ஆடி 31 ▶ கிழமை: சனி ▶ நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM, 4:45 PM – 5:45 PM ▶ கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶ எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶ குளிகை: 6:00 AM – 7:30 AM ▶ திதி: அஷ்டமி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: தேய்பிறை.