News April 12, 2024
தமிழக அரசு, சிஏஜி இடையே மோதல் (1)

மத்திய கணக்கு தணிக்கை (சிஏஜி) அலுவலக ஆடிட்டர் ஜெனரலை திருப்பியதால், அந்த அமைப்புக்கும் தமிழக அரசுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. கணக்கு தணிக்கைக்காக சிஏஜியால் அனுப்பப்பட்ட மூத்த அதிகாரியான ஜெய்சங்கரை அவரது பணிக்கே மீண்டும் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி தமிழக அரசு திருப்பி அனுப்பி உத்தரவிட்டது. இதற்கு ஆட்சேபம் தெரிவித்தும், சிஏஜி உடனடியாக தலையிட வலியுறுத்தியும் ஜெய்சங்கர் கடிதம் எழுதியுள்ளார்.
Similar News
News July 4, 2025
கேப்டன் ஆசையில் உள்ளாரா ஜடேஜா?

கோலி, ரோகித், அஸ்வின் போன்ற வீரர்கள் ஓய்வுப் பெற்றுவிட்டனர். இருப்பினும் பும்ரா, கில் போன்ற வீரர்களையே கேப்டானாக பார்த்த தேர்வாளர்கள், ரவீந்திரா ஜடேஜாவை பார்க்க தவறிவிட்டனர். தற்போதுள்ள அணியில் மூத்த வீரர் என்றால் அது ஜடேஜா தான். கேப்டனாக வேண்டும் என ஆசை உள்ளதா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘அந்த கப்பல் கரையை கடந்துவிட்டது’, அதாவது அதற்கான நேரம் முடிந்துவிட்டது என நாசூக்காக சொன்னார் ஜடேஜா.
News July 4, 2025
அஜித் மரண வழக்கு: நீதிபதி தீவிர விசாரணை

அஜித் மரண வழக்கில் மதுரை நீதிபதி 3 நாட்களில் 17 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளார். இந்த வழக்கை விசாரிக்க நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. அதன்படி அஜித்தின் தாயார், உறவினர்கள், போலீஸார், கோயில் பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுநர், அறநிலையத்துறை அதிகாரி உள்ளிட்ட பலரிடம் நீதிபதி விசாரணை நடத்தியுள்ளார். சம்பவத்தை அறிந்தவர் நேரில் சாட்சியளிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
News July 4, 2025
கோபத்தில் காதலி செய்த காரியம்… கொடூரம்!

உ.பி.யில் காதலி அழைத்ததன் பேரில் விகாஷ் என்பவர் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். இருவரும் இரவு முழுவதும் தனிமையில் இருந்துள்ளனர். காலை இருவருக்குமிடையே மோதல் ஏற்பட, ஆத்திரத்தில் அந்த பெண் பிளேடால் அவரின் ஆண் உறுப்பை கிழித்துள்ளார். ரத்தம் சொட்ட சொட்ட விகாஷ் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். இதுகுறித்து போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்படவில்லை. ஆனால் விகாஷின் தாயார் மூலம் தகவல் வெளியே வந்துள்ளது.