News September 16, 2025
கோவை: போதையால் நேர்ந்த விபரீதம்!

கோவை சொக்கம்புதூரை சேர்ந்தவர் ஹரி பிரகாஷ்(26). பிளம்பராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று தனது தாயாரிடம் பணம் வாங்கிக்கொண்டு வெளியே சென்றுள்ளார். பின்னர், டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்திவிட்டு எரிமேடு தண்டு மாரியம்மன் கோவில் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது, அவர் அங்கு நிலைதடுமாறி அங்கிருந்த சாக்கடை கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News September 16, 2025
கோவை: தேர்வில்லாமல் அரசு வேலை!

கோவை மக்களே, எழுத்துத் தேர்வு இல்லாமல், தமிழ்நாடு அரசின் எழுத்துப்பொருள் மற்றும் அச்சுத்துறையின் கீழ் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரையிலான ஊதியத்தில் 56 காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் 19.09.2025 தேதிக்குள் <
News September 16, 2025
கோவை செங்குளத்தில் மூழ்கி பலி

கோவை குனியமுத்தூர் செங்குளத்தில் நேற்று முன்தினம் ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கோவை ஜிஎச் அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News September 16, 2025
கோவை: IT -இல் செல்ல ஆசையா? இலவச Python பயிற்சி

கோவையில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச Data Analytics using Python பயிற்சி வழங்கப்படவுள்ளது. 18 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், Data Analytics, Python பயிற்சி அளிக்கப்படுவதோடு, அதில் உள்ள நுட்பங்கள் அனைத்தும் கற்றுத்தரப்படுகிறது. இதற்கு டிகிரி முடித்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க <