News September 16, 2025
போக்சோ குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை

அம்பாசமுத்திரம் பொத்தையை சேர்ந்த பாலசுப்பிரமணியம் கடந்த ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த மனநல பாதித்த சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். போக்சோ சட்டத்தில் பாலசுப்ரமணியன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்தது. நீதிபதி சுரேஷ்குமார் நேற்று (செப் 15) வழக்கை விசாரித்து பாலசுப்பிரமணியனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார்.
Similar News
News September 16, 2025
ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நெல்லை காவல்துறை அறிவுரை

திருநெல்வேலி மாநகர பகுதிகளில் ஏராளமான மாணவர்கள் ஆட்டோக்களில் பயணம் செய்து பள்ளிக்கு சென்று வருகின்றனர். ஆட்டோக்களின் அளவுக்கு மீறி மாணவர்களை ஏற்றி செல்வதாக தொடர்ந்து புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹதிமணி போக்குவரத்து காவலர்கள் மூலம் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளார். குறிப்பிட்ட அளவிலேயே ஆட்டோகளில் குழந்தைகளை ஏற்றி செல்ல வேண்டும் என அறிவுரை.
News September 16, 2025
நெல்லை: நவதிருப்பதிகளுக்கு ரூ.500 கட்டணத்தில் சிறப்பு பேருந்து

நெல்லை அரசு போக்குவரத்துக் கழகம் புரட்டாசி சனிக்கிழமைகளான செப். 20, 27, அக். 4, 11 ஆகிய நாட்களில் நவ திருப்பதி கோயில்களுக்கு சிறப்பு பஸ் சேவை இயக்குகிறது. காலை 6 மணிக்கு நெல்லை புதிய பஸ் நிலையத்திலிருந்து புறப்படும். இந்த பஸ்கள் 9 கோயில்களை தரிசித்து இரவு திரும்பும். (கட்டணம் நபருக்கு ரூ.500) முன்பதிவு காலை 8 முதல் இரவு 8 மணி வரை. விவரங்களுக்கு 7904906730, 9994462713 (or) www.tnstc.in காணவும்.
News September 16, 2025
நெல்லையில் அட்டூழியம்: அடுத்தடுத்து 3 வீடுகளில் கொள்ளை

நெல்லை: திருமால்நகர் பகுதியில் இன்று (செப் 16) அதிகாலை அடுத்தடுத்து 3 வீடுகளில் கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒரு வீட்டில் 3 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம், பித்தளை பொருட்கள் மற்றும் விலை உயர்ந்த கைக்கடிகாரத்தை திருடி சென்று விட்டனர். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின்படி பெருமாள்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.