News September 16, 2025
ஒற்றுமை என்ற பெயரில் புதிய கோஷம்: ஆர்.பி.உதயகுமார்

ஒற்றுமை என்ற பெயரில் செல்லாக்காசுகள் புதிதாக கோஷம் எழுப்புவதாக ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். சிலர் கூலிப்படையாக செயல்பட்டு அதிமுக விலாசத்தை சிதைத்து விடலாம் என்று முயற்சி செய்கின்றனர். EPS-க்கு பலவீனத்தை ஏற்படுத்த நினைக்கும் செல்லாக்காசுகளின் திட்டம் ஒருகாலத்திலும் நடக்காது என்றும், சிலர் பதவி சுகம், அதிகாரத்தை பெற பேசுவதாகவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
Similar News
News September 16, 2025
இறந்தவர் மீண்டும் உயிருடன் வந்த அதிசயம்!

ஒடிசாவில் தனது மருமகன் வீட்டில் வசித்துவந்த லட்சுமி(86), கட்டிலில் அசைவற்று கிடந்துள்ளார். மூச்சும் விடவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், அவர் இறந்துவிட்டதாக எண்ணி தகனம் செய்யும் பணி தொடங்கியுள்ளது. எரியூட்டுவதற்கு முன், லட்சுமி மூச்சுவிடுவதை கண்டு மயான ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாட்டிக்கு ஆயுசு கெட்டி!
News September 16, 2025
மழை பெய்தால் மரங்கள் விழுவது ஏன் தெரியுமா?

தொடர்ந்து மழைபெய்வதால் ஈரப்பதம் அதிகரித்து மண் தளர்வாகிறது. இதோடு, நிலத்தில் மழைநீர் தேங்குவதால், மரங்களால் ஆக்சிஜனை உள் இழுக்கமுடியாமல் அதன் வேர்கள் அழுகிப்போகும் நிலை ஏற்படுகிறதாம். இதனால் தான் பெரிய மரங்கள் கூட சின்ன சின்ன மழைக்கும் முறிந்து விழுகின்றன. ஆனால் எவ்வளவு மழைநீர் தேங்கினாலும் சில மரங்களின் வேர்கள் மட்டும் அழுகிப்போகாது என நிபுணர்கள் சொல்கின்றனர். SHARE.
News September 16, 2025
வங்கி கணக்கு KYC அப்டேட் பண்ணுவது எப்படி?

வரும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் வங்கி கணக்கில் KYC அப்டேட் செய்வது அவசியம். அதற்கு: *வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று Login செய்யவும். *அதில், ‘KYC அப்டேட்’-ஐ கிளிக் செய்து, ‘வங்கி விவரங்களைப் புதுப்பி’ ஆப்ஷனை தட்டவும். *ஆதார், பான் & முகவரிச் சான்றுகளுடன் (ரேஷன் கார்டு, மின்சாரக் கட்டணம்) போட்டோ போன்றவற்றை டிஜிட்டல் வடிவத்தில் பதிவேற்றி, Submit செய்தால், முடிஞ்சு! SHARE.