News September 16, 2025

கவின் ஆணவ கொலை வழக்கு…. முக்கிய விசாரணை

image

நெல்லையில் ஐடி ஊழியர் கவின் ஆணவகொலை வழக்கில், கைது செய்யப்பட்ட எஸ்ஐ சரவணன், அவரது மகன் சுர்ஜித், உறவினர் ஜெயபால் ஆகியோரின் நீதிமன்ற காவல் 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. சரவணனின் ஜாமீன் மனு நெல்லை மாவட்ட 2வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி ஹேமா, விசாரணையை இன்று (செப் 16) ஒத்திவைத்தார். இரு தரப்பு வாதங்களுக்குப் பின் ஜாமீன் முடிவு எடுக்கப்படும்.

Similar News

News September 16, 2025

நெல்லையில் அட்டூழியம்: அடுத்தடுத்து 3 வீடுகளில் கொள்ளை

image

நெல்லை: திருமால்நகர் பகுதியில் இன்று (செப் 16) அதிகாலை அடுத்தடுத்து 3 வீடுகளில் கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒரு வீட்டில் 3 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம், பித்தளை பொருட்கள் மற்றும் விலை உயர்ந்த கைக்கடிகாரத்தை திருடி சென்று விட்டனர். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின்படி பெருமாள்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News September 16, 2025

போக்சோ குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை

image

அம்பாசமுத்திரம் பொத்தையை சேர்ந்த பாலசுப்பிரமணியம் கடந்த ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த மனநல பாதித்த சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். போக்சோ சட்டத்தில் பாலசுப்ரமணியன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்தது. நீதிபதி சுரேஷ்குமார் நேற்று (செப் 15) வழக்கை விசாரித்து பாலசுப்பிரமணியனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார்.

News September 16, 2025

விரைவில் நெல்லை வரும் விஜய்

image

தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் நெல்லையில் அக்டோபர் 11ஆம் தேதி சுற்று பயணம் மேற்கொள்கிறார்.நெல்லை டவுன், வாகையடி முனை, வண்ணார்பேட்டை, பாளை மார்க்கெட், சமாதானபுரத்தில் விஜய் பேசுவதற்கு கட்சியினர் ஏற்பாடு செய்து வருகின்றனர். பிரச்சார பயணத்திற்கு அனுமதி கேட்டு தவெக நிர்வாகிகள் ஜாகிர் உசேன், மரிய ஜான், ராஜகோபால், ஆகியோர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

error: Content is protected !!