News September 16, 2025
கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் ரூபாய் 337.46 கோடி பயிர்க்கடன்!

சேலம் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாக 3,89,785 விவசாயிகளுக்கு ரூபாய் 3,266.35 கோடி பயிர்க்ககடன்களும் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் மட்டும் ரூபாய் 1,038 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த 5 மாதங்களில் மட்டும் 34,434 விவசாயிகளுக்கு ரூபாய் 337.46 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News September 16, 2025
சேலம் ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி!

நவராத்திரி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலம் வழியாக சென்னை சென்ட்ரல்-போத்தனூர்-சென்னை சென்ட்ரல் வாராந்திர சிறப்பு ரயில்களை (06123/06124) சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. செப்.25 முதல் அக்.24 வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சிறப்பு ரயில் சேலம் ரயில் நிலையத்தில் 10 நிமிடங்கள் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 16, 2025
சேலம் மக்களே.. இந்த வாட்ஸ் அப் நம்பர் முக்கியம்!

சேலம் மக்களே.. பிறப்பு, இறப்பு சான்றிதழ் தொடர்பான சேவைகள், சொத்து வரி செலுத்துதல் , பொதுமக்கள் குறைதீர்க்கும் சேவைகள், என 32 வகையான சேவைகளுக்கு இனி எங்கும் அலைய வேண்டாம். உங்கள் பகுதிக்கான அனைத்து சேவைகளுக்கும் 9445061913 எனும் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு ஒரு ‘HI’ அல்லது ‘வணக்கம்’ மெசேஜை அனுப்பினால் போதும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News September 16, 2025
விதிமுறைகளை மீறிய வாகனங்களுக்கு அபராதம்

சேலம் சரகத்துக்கு உட்பட்ட சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட 1,534 பேருக்கு ரூபாய் 57 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றும், 169 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 67 வாகன ஓட்டுனரின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், வட்டாரப் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.