News September 16, 2025
குமரி: ஏமாற்றிய அரசு ஊழியரால் பெண் விபரீத முடிவு

குலசேகரத்தை சேர்ந்த ரமணியின் கணவர் அஜிகுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். ரமணி அரசுப் பணி கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்த போது, அங்கு ஆர்.ஐ. யாக பணியாற்றிய வேல்முருகன் ரமணியை திருமணம் செய்வதாக கூறி நகை, பணம் பெற்றுள்ளார். பின் வேல்முருகன் வேறொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். இதனால் ஏமாற்றமடைந்த ரமணி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News September 16, 2025
குமரி: ரூ.35,000 சம்பளத்தில் ரயில்வேயில் சூப்பர் வேலை..!

இரயில்வே துறையில் Station Controller வேலைக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
▶️ காலியிடங்கள்: 368
▶️ வயது வரம்பு: 20 – 33
▶️கல்வி தகுதி: Any Degree
▶️ பணிகள்: Station Controller
▶️ சம்பளம்: ரூ.35,400
▶️ பணியிடம்: தமிழ்நாடு
▶️ ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 15.09.2025
▶️ ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்: 14.10.2025. விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
News September 16, 2025
குமரி: இனிமேல் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது..!

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் நேற்று (செப் 15) கூறியதாவது,” சிசிடிவி கேமராக்கள் அமைப்பதால் மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. குமரி மாவட்ட காவல்துறை சார்பில் ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 1315 சிசிடிவி கேமராக்கள் பல இடங்களில் பொருத்தப்பட்டுள்ளது” என்றார். இதனால் குமரியில் குற்றச்சம்பங்கள் குறைய வாய்ப்புள்ளது.
News September 16, 2025
குமரி: திருடச் சென்ற இடத்தில் முதியவருக்கு நேர்ந்த சோகம்

நாகர்கோவில் கோட்டார் செட்டி தெரு பகுதியில் உள்ள நியாயவிலைக் கடையில் இன்று (செப் 16) அதிகாலையில் முதியவர் ஒருவர் கடையில் உள்ள பொருட்களை திருடி சென்று விட்டு வெளியே வரும்போது மாரடைப்பில் உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.