News September 16, 2025

திருப்பத்தூர்: குற்றவாளிகளை உ.பியில் தட்டி தூக்கிய போலீஸ்

image

ஆம்பூர் தாலுகா அருங்கல் துருகம் அருகே காவலாளி ஆஸ்கார் பாஷாவை கடந்த 10 தேதி கொலை செய்து கிணற்றில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், உத்திரபிரதேசம் மாநிலத்திற்கு தப்பி ஓடிய கொலையாளிகள் அணில் குமார், அத்தி ஆகிய 2 பேரை தனிப்படை போலீசார் இன்று (செப்.16) காலை கைது செய்து உமராபாத் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

Similar News

News September 16, 2025

திருப்பத்தூர்: காவல்துறை புதிய அறிவிப்பு

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தனது சமூக வலைத்தளம் பக்கத்தில் பொதுமக்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி வாகனங்களை இயக்கும்போது செல்போன் பயன்படுத்தினால் கவனம் சிதறடிக்கப்பட்டுப் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. வாகனங்கள் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்கவும். என பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து பரவி வருகின்றது.

News September 16, 2025

திருப்பத்தூர்: வேலை தேடும் இளைஞர்கள் இங்க போங்க

image

திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் மாதந்தோறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இம்மாதம் வரும் 19.09.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. விபரங்களுக்கு மாவட்ட தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது தொலைபேசி எண் 04179-222033 வாயிலாக தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News September 16, 2025

BIG BREAKING: ஆம்பூரில் ரத்த வெள்ளத்தில் கிடந்த சடலம்

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகர பகுதியில் உள்ள சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் கீழ் இன்று (செப்.16)ஆம்பூர் புதுமண்டியை சேர்ந்த மகேந்திரன் என்பவர் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உடனடியாக இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் நகர காவல் துறையினர் இறந்தவரின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!