News September 16, 2025

நீலகிரி: பொதுக்கூட்டத்தில் நுழைந்ததால் பரபரப்பு!

image

குன்னூரில் நேற்று நடந்த அ.தி.மு.க., பொதுக்கூட்டத்தில் பேசிய சிலர், நகராட்சியில் நடக்கும் தி.மு.க., ஊழல் குறித்தும், அரசு கொறடாவையும் விமர்சித்து பேசியுள்ளனர். அப்போது கோபமான, மாவட்ட செயலாளர் ராஜூ ஆதரவாளர்கள் செல்வம், கோவர்த்தனன், பாரூக் உட்பட திமுகவினர் சிலர், அதிமுகவினரின் பொதுக்கூட்டத்திற்கு சென்று, ஒலிபெருக்கியை நிறுத்துமாறு, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் தடுத்து அனுப்பி வைத்தனர்.

Similar News

News September 16, 2025

அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு வரவேற்பு!

image

நீலகிரி மாவட்டம், உதகைக்கு வருகை புரிந்த தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை, திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில துணை செயலாளர் மு.வாசிம் ராஜா மற்றும் உதகை நகர மன்ற துணைத் தலைவர் ரவிக்குமார் ஆகியோர் அவரை வரவேற்றனர். பின்னர் திராவிட முன்னேற்ற கழக நிர்வாகிகளுடன் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

News September 16, 2025

நீலகிரியில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்!

image

நீலகிரி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையம் சார்பில், உதகையில் வரும் 19ம் தேதி, காலை 10 மணி முதல், சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 10, 12ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல் பட்டப்படிப்பு முடித்த அனைத்து மனுதாரர்கள் தங்களது சுய விவரம், கல்விச் சான்றுகளின் நகல்களுடன் கலந்து கொண்டு வேலை வாய்ப்பு பெறலாம். இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 16, 2025

நீலகிரி மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை!

image

கூடலுார், ஓவேலி, குண்டம்புழா வனப்பகுதிகளில் உலாவரும் காட்டு யானைகள், இரவு நேரத்தில் பாண்டியர் டான்டீ தேயிலை தோட்டம் வழியாக வருகின்றன. பின், இரும்புபாலம், பால்மேடு, மரப்பாலம், ஆமைக்குளம் வழியாக சாலையை கடந்து கூடலுார் – கோழிக்கோடு சாலையை இரவு மற்றும் காலை நேரத்தில் காட்டு யானைகள் கடந்து செல்வதால், ஓட்டுனர்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்,’ என, வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

error: Content is protected !!